Seeman - சீமான்
1.8K views
1 years ago
நேற்று (22.06.2024) பரந்தூர் வானூர்தி நிலையத் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவின் நிர்வாகிகள் என்னுடைய இல்லத்தில் என்னைச் சந்தித்து போராட்ட முன்னெடுப்புகள் குறித்துப் பேசினர். சற்றொப்ப 700 நாட்களாகப் போராடி வரும் நிலையிலும் பொதுமக்களின் கோரிக்கையினைப் பொருட்படுத்தாத அரசு வானூர்தி நிலையத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. வானூர்தி நிலையத் திட்டத்தின் தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வரும் நாம் தமிழர் கட்சி, பொதுமக்களின் பக்கம் நிற்கும் என்று போராட்டக்குழுவினருக்கு உறுதியளித்தேன். திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தத் தரவுகளை வெளியிடுவதில் அரசு செய்யக்கூடிய குளறுபடிகளைப் போராட்டக்குழுவினர் விளக்கினர். இறுதிவரை மண்ணின் நலனுக்காக மண்ணின் மக்கள் போராட வேண்டும் என்றும், அதற்கான அனைத்து முன்னெடுப்புகளிலும் நாம் தமிழர் கட்சி பங்கெடுக்கும் என்றும் அவர்களிடம் தெரிவித்தேன். #சீமான் அறிக்கை