பல பெண்களுக்கு மாரடைப்பு எந்த வலியும் இல்லாத அறிகுறிகளைக் கொண்டுள்ளது. ஆரம்பகாலத்தில் மூச்சுத் திணறல், மார்பு வலி இல்லாமல் சொல்லமுடியாத சோர்வு வரலாம். குமட்டல், வாந்தி, இரைப்பை குடல் நோய் வரலாம். அடிக்கடி தலைச்சுற்றல் அல்லது லேசான தலைவலி வரக் கூடும். வியர்வையில் கூட மாற்றம். இதைக் கவனித்து மருத்துவரை அணுகி உடனடி சிகிச்சைப் பெற வேண்டும்.
மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவுகள் குறைவதால் இந்த நோய் ஆபத்து அதிகரிக்கலாம். சர்க்கரை நோய் ஆண்களை விடபும் பெண்களுக்கு மாரடைப்பு வருகிற ஆபத்தை ஏற்படுத்துகிறது. இது தவிர, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், டிஸ்லிபிடெமியா ஆகியவை காரணமாக இருக்கலாம். அதிக நேரம் அமர்ந்த நிலை வாழ்க்கை முறை, உடல் பருமன், மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவை காரணமாக இருக்கலாம்.
ஆரம்ப அறிகுறிகளில் மருத்துவரை அணுக வேண்டும். நல்ல உணவுப் பழக்கம் இருப்பது அவசியம். நல்ல கொழுப்புகள், புரதம், தாதுக்கள் உள்ள ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள். தினமும் உடற்செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். அதிக நேரம் அமர்ந்த நிலையில் இருக்காமல் அவ்வப்போது நடப்பது நல்லது. தினமும் காலை, மாலை ஆகிய இருநேரங்களிலும் 30 நிமிடங்கள் நடக்க வேண்டும்.
#🌱 இயற்கை மருத்துவம் #pengal vazhkai