#😲தளபதி விஜய் கைது… அமைச்சர் பரபரப்பு!😱 சமூக வலைதளங்களில் இதுவரை பார்த்த வரையிலும் விஜய் ரசிகர்கள், தொண்டர்கள் கரூர் அசம்பாவிதத்தில் உயிரிழந்த 41 உயிர்களை பற்றியோ, கதறி துடிக்கும் அவர்கள் குடும்பம் பற்றியோ துளியும் கவலைப்பட்டதாக தெரியவில்லை....அவர்கள் கவலை, கதறல்கள் எல்லாம் விஜய் க்கும், அவர் அரசியலுக்கும் கெட்ட பெயர் வந்து விட கூடாது என்பது பற்றியதாக தான் இருக்கிறது....
ஆரம்பத்தில் இருந்தே படத்திற்கு கூட்டம் கூடுவதை பார்த்து புளகாங்கிதம் அடையும் நடிகனின் மனநிலையில் தான் விஜய் இருக்கிறார்... தன்னால் தனக்காக கூடிய கூட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு ஒரு தலைவனாக உடனடியாக முன் வந்து நின்றிருக்க்க வேண்டும்.... அச்சப்பட்டு ஓடியிருக்க கூடாது....
ஹீரோ வாக நடிப்பது ஈஸி...ஆனால் உண்மையான ஹீரோவா இருப்பது ரொம்ப கஷ்டம்... தலைமை ஏற்று வழிநடத்தும் பண்பு என்பது ஒரு கலை...அது இன்னும் இவருக்கு கைவர வில்லை.... சினிமா டயலாக் பேசி தலைவன் ஆகி விடலாம் என்று நினைப்பதெல்லாம் விஜய் யின் பக்குவமில்லாத முதிர்ச்சியற்ற அரசியல் அறிவையே வெளிப்படுத்துகிறது....
இங்கே வருத்தமெல்லாம், தன்னை பற்றியும், தன் குடும்பத்தை பற்றியும் அக்கறை கொள்ளாத, விஜய் யை தீவிரமாக பின்பற்றும் நிதானமற்ற விவேகமற்ற, வெறித்தனமான உணர்ச்சிவசம் கொண்ட இன்றைய தலைமுறையினரை நினைத்து தான்....
விஜய் ரசிகையாக, நடிகராக விஜய்யை பிடித்த அளவிற்கு, அரசியல் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.....