#நொடிகள்
வாழ்வில் நொடியினை விரையமாக்காதீர்கள்.. நொடியினைக் கட்டிப் போடக் கயிறு தேடுகின்றது மனது...
கயிறு தேடிய நொடிகளைக் கூட நம்மால் கட்டிப் போட முடியாது... நிமிடத்தின் கழுத்தை இறுக்கிப் பிடிக்க , பின்னால் துரத்த நினைக்கின்றோம்... துரத்தி ஓடிய நிமிடங்கள் கூட நம்மை விட வேகமாய் ஓடுகிறது..
வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் நம்மை வீணாக்காமல், அந்த நொடிகள் நம்மை விட்டுப் பிரிவதில்லை... வாழ்வின் நொடிகளில் நொடிந்துப் போகாமல் வாழ்வாக்குவோம்...
மற்றவர் தொட்ட உயரத்தை உங்கள் இலக்காக வைத்துக் கொள்ளாதீர்கள்... நீங்கள் தொட்ட உயரத்தை மற்றவர்களுக்கு இலக்காக்குங்கள்..
கரைகளைத் தாண்டும் முதலைகளும்... கட்டுப்பாடுகளைத் தாண்டும் மனங்களும் தங்கள் பலத்தை இழக்கின்றன..