*தே³வீ நாராயணீயம் - ஏகாத³ஶ த³ஶகம் 11*
*ப்³ரஹ்மநாரத³ ஸம்வாத³ம் - ஸ்லோகம் 5*
கௌணானி சா,அந்த: கரேந்த்ரியாணி
ஸா நிற்குணா வாங்,மதிகோசரா ச
ஸா ஸ்தோத்ர மந்த்ரை:, சகுணா மஹத்பிஹி
ஸம் ஸ்தூயதே, பக்த, விபன்னிஹந்த்ரீ
*ஸகுணையும் அவள்தான். நிர்குணையும் அவள்தான். ஸகுணை என்றால் எப்படி இருப்பாள் என்று வார்த்தையால் வருணிக்க முடியும். மனதால் சங்கல்பமும் செய்யலாம். ஆனால் நிர்குணையை வருணிக்க முடியாது. மனதால் சங்கல்பம் செய்யவோ புத்தியால் ஊகிக்கவோ முடியாது. புத்தியும் மனமும் குணமயமானது. முக் குணங்களால் சூழப்பட்ட மனதால் நிர்குண ப்ரம்மத்தை எவ்வாறு அறிய முடியும்? குணங்கள் அஹங்காரத்தினின்றும் தோன்றியவை. பரமாத்மா அஹங்காரத்திற்கு அப்பாற்பட்டவர். பித்த நீரால் வ்யாபிக்கப் பட்ட நாவினை உடையவன் உறைப்பு, இனிப்புச் சுவைகளை அறியமுடியுமா? சித்தத்தில் அஹங்கார நிவர்த்தி உண்டானால் தான் பரமாத்மாவை தரிசிக்க முடியும். அதனால் ஸகுணையும் நிர்குணையும் ஆன அன்னையை குணமயமான மனதாலோ அல்லது புத்தியாலோ அறியமுடியாது. எனவே நீ ஸகுண பரமாத்மாவை ஸ்தோத்ரம் செய் என்றார் ப்ரம்மா. நாம் சொல்லும் ஸ்தோத்ரங்கள் எல்லாம் ஸகுணையான அன்னைக்கே. நிர்குணையை வார்த்தைகளால் ஸ்தோத்ரம் செய்ய முடியாது.* 🚩🕉🪷🙏🏻
#நாராயணீயம #🙏அம்மன் துணை🔱 #இந்து பெண் தெய்வங்கள் #🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்