saravanan.
2.1K views
#saami Saranam iyappaa. *சபரிமலை அகராதி :* 1) சொரிமுத்தைய்யன் கோவில் - சாஸ்தாவின் மூலாதார சக்ர கோவில் 2) அச்சன்கோவில் - சாஸ்தாவின் ஸ்வாதிஷ்டான சக்ர கோவில் 3) ஆரியங்காவு - சாஸ்தாவின் மணிபூரக சக்ர கோவில் 4) குளத்துப்புழை - சாஸ்தாவின் அநாகத சக்ர கோவில் 5) எருமேலி - சாஸ்தாவின் விசுக்தி சக்ர கோவில் 6) சபரிமலை - சாஸ்தாவின் ஆக்ஞா சக்ர கோவில் 7) காந்தமலை ( பொன்னம்பல மேடு ) - சாஸ்தாவின் ஸஹஸ்ரார ( பிரம்மாந்திரம் ) சக்ர கோவில் 8) இருமுடிக்கட்டு - பாவ புண்ணியங்களை இருமுடிக்கட்டாக எடுத்து செல்லும் புனிதமான வழிபாடு முன் முடியில் ஐயப்பனின் நைவேத்ய பொருட்களும் பின் முடியில் வழித்தேவைக்கான பொருட்களும் இருக்கும் 9) புத்தன் வீடு - எருமேலியில் உள்ளது மகிஷியை வதம் செய்த ஐயப்பன் தங்கி இளைப்பாறிய இடம் மகிஷியை வதம் செய்த ஐயப்பனின் வாள் இன்றும் புத்தன் வீட்டில் தரிசிக்கலாம் 10) பேட்டைத் துள்ளல் - முதன்முறை சபரி செல்லும் கன்னிச்சாமிகள் உடல் முழுவதும் பல வண்ணங்கள் பூசி ஆடும் ஆட்டம் 11) பேரூர் தோடு - இரும்பொன்னி கரையில் உள்ள சிவன் கோவில் இங்கு குளத்தில் வசிக்கும் மீன்களுக்கு பொரி செலுத்தி பிரார்த்திக்கும் இடம் 13) காளைகட்டி ஆசிரமம் - மகிஷி வதத்தை சிவபெருமான் காளையை இந்த இடத்தில் கட்டி பார்த்த இடம் 14) இஞ்சிப்பாறைக் கோட்டை - பெருவழியில் உள்ள ஒரு பாறையின் பெயர் 15) இடைத்தாவளம் - இளைப்பாறும் இடம் 16) அழுதா நதி - பம்பை நதியின் கிளை நதி 17) கல்லிடங்குன்று - கன்னிசாமிகள் அழுதாநதியில் மூழ்கி கல் எடுத்து கல்லிடங்குன்றில் சேர்க்கும் பிரார்த்தனை செய்யும் இடம் 18) கரிவலந்தோடு - பெருவழியில் உள்ள இடம் 19) கரிமலை - பெருவழியில் உள்ள உயர்ந்த மலை 20) உடும்பாறைக் கோட்டை - கரிமலை தொடக்கத்தில் உள்ள கோட்டை 23)பெரியானை வட்டம் - யானைகள் தங்குமிடம் 24) சிறியானை வட்டம் - யானைகள் தங்குமிடம் 25) பம்பா நதி - சபரிமலை அடிவாரத்தில் ஓடும் புண்ணிய நதி ஸ்வாமி ஐயப்பன் அவதரித்த திருத்தலம் 26) பம்பா சத்யா - பம்பைக்கரையில் நடத்தப்படும் அன்னதானம் 27) அம்பலப்புழா - எருமேலி பேட்டை துள்ளலில் பங்கெடுக்கும் ஒரு முக்கிய குழு 28) பந்தளம் - ஐயப்பன் வளர்ந்த ஊர் 29) அம்பலப்புழா கோவில் - பந்தள அரண்மனைக்குள் உள்ள கோவில் 30) ஆலங்காட்டு சங்கம் - எருமேலியில் பேட்டை துள்ளி மலையேறும் சங்கம் இச்சங்கம் ஆனது ஆலங்காட்டு யோகம் என்றும் அழைக்கப்படுகிறது 31) இரும்பூன்னிக்கர - பெருவழியில் உள்ள ஊர் 32) உதயணன் - உடும்பாறைக் கோட்டையில் வாழ்ந்து வந்த ஒரு கொள்ளைக்காரன் 33) இலவந்தோடு - உடும்பாறைக் கோட்டைக்கு அடுத்த இடம் 34) எலவந்தாவளம் - புதுச்சேரி ஆற்றின் ஓரம் அமைந்த இடம் 35) ஐயப்பன் குரு கோவில் - ஐயப்பன் குருகுலவாசம் செய்த இடம் பந்தளத்தில் இருந்து 4கிமீ தூரத்தில் உள்ளது 36) கன்னிச்சாமி - முதல்முறை சபரியாத்திரை செல்லும் பக்தர் 37) குருசாமி - சபரியாத்திரைக்கு வழிநடத்தி செல்பவர் 38) குருநாதன் முகடு - ஐயப்பனுக்கு ஆயுதபயிற்சி அளித்த குரு சமாதியடைந்த மலை 39) சீரப்பஞ்சிரா மூக்கன் - ஐயப்பனுக்கு ஆயுதப்பயிற்சியும் மல்யுத்தமும் அளித்தவர் 40) புலிக்குன்னு : தாயின் தலைவலிக்கு புலிப்பால் கொண்டு வரும் வழியில் ஐயப்பன் புலிகளோடு தங்கிய மலை 41) பூரணை புஷ்களை - சாஸ்தாவின் இரு தேவியர் 42) பூதநாத கீதை - ஐயப்பன் பந்தள மன்னனுக்கு உபதேசித்த ஆன்மீக தத்துவங்கள் 43) நீலிமலை - பம்பையை தாண்டியவுடன் ஏறும் முதல் மலை 44) முக்கால் வட்டம் - சீரப்பஞ்சிராவிற்கு அருகில் உள்ள கோவில் 45) முக்குழி - பகவதி கோவில் உள்ள இடம் 46) வாபூரன் - சாஸ்தாவின் சிவகண தலைவன் 47) வலியம்பலம் - பெரிய கோவில் 48) வலியக்கோவில் கல் - பந்தளராஜா தான் வணங்குவதற்காக பந்தள அரண்மனைக்கு அடுத்து கட்டிய கோவில் 49) ராஜசேகர பாண்டியன் - பந்தள ராஜா ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை 50) அப்பாச்சி மேடு - நீலிமலைக்கு அடுத்த மலை 51) அம்பலப்புழா வேலகழி - தாள லயத்துடன் கற்றுத்தரப்படும் ஆயுத பயிற்சி 52) ஆறாட்டு - ஐயப்பன் பம்பை நதியில் நீராடி செல்லும் விழா 53) சபரி பீடம் - பெண் துறவியான அன்னை சபரி வாழ்ந்த இடம் 54) சரங்குத்தி ஆல் - எருமேலியில் இருந்து எடுத்து வந்த அம்பு சரங்களை சமர்ப்பிக்கும் இடம் 55) காணிப்பொன் - ஐயப்பனுக்கு செலுத்தும் குருதட்சணை 56) உஷபூஜை - காலை நேர பூஜை 57) ஐயப்பன் விளக்கு - முதன்முறை சபரியாத்திரை செல்லும் கன்னிசாமிகள் பம்பையில் நடத்தும் வழிபாடு 58) களபாபிஷேகம் - தைமாதம் 5ம்தேதி பந்தள மன்னர் முன்னிலையில் சாஸ்தாவுக்கு செய்யப்படும் சந்தனாபிஷேகம் 59) திருவாபரண பெட்டகம் - சங்கராந்தி தினத்தன்று ஐயப்பனுக்கு சாற்றப்படும் நகைகள் உள்ள பெட்டகம் 60) ஐயப்பன் மந்திரம் - ஒவ்வொரு ஆண்டும் புதிதாக பதவி ஏற்கும் மேல்சாந்திக்கு தந்திரி சொல்லிக் கொடுக்கும் மந்திரம் 61) கல்பாத்தி கோவில் - ஐயப்பனுக்கு தேரோட்டம் நடைபெறும் முக்கியமான கோவில் 62) குருதிபூஜை - மாளிகைபுறத்தில் நடத்தப்படும் பூஜை 63) கொச்சுக் கடுத்தன் - ஐயப்பனின் போர்வீரன் 64) கொச்சம்பலம் - சிறிய கோவில் 65) கோப்தா - சாஸ்தாவின் பரிவார தேவதை 66) பூங்காவனம் - சபரிமலை கோவிலையும் அதை சுற்றியுள்ள இடத்தையும் அழைக்கும் சொல் 67) கோட்டைப்படி - தர்மசாஸ்தாவின் பூங்காவன நுழைவாயில் 68) நந்தவனம் - சபரிமலை ஐயப்பனின் பூங்காவனம் 69) கொச்சுவேலன் - ஐயப்பனுடன் வனப்பயணத்தில் உடன் சென்றவர் 70) சரப்ப்பாட்டு - பக்தர்களின் சர்ப்பதோஷம் நீங்க மாளிகைபுறத்தம்மன் சன்னதியில் பாடும் பாட்டு 71) சகஸ்ர கலசாபிஷேகம் - 1008 கலசங்கள் வைத்து பூஜித்து ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யும் வழிபாடு 72) சரணம் அய்யப்பா - ஐயப்பனை வழிபடும் மந்திரம் 73) ஸ்வாமி சரணம் - எதிர்ப்படும் அய்யப்பமார்களை ஐயப்பனாக கருதி வழிபடும் சரணம் 74) சாஸ்தா பாட்டு - ஐயப்பனின் அருட்சரித்ரம் மலையாளத்தில் ஏழு பாகங்களாக உள்ளது 75) சிரம்பிக்கல் மாளிகை - பந்தளத்தில் ஐயப்பனின் திருவாபரணங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் அரண்மனை 76) சின்முத்திரை - ஐயப்பனின் வலதுகரம் காட்டுவது இரண்டு விரல்களை ( ஆட்காட்டி விரலை பெருவிரலோடு ) மடக்கி மூன்று விரல்களை ( சுண்டுவிரல் ; மோதிரவிரல் ; நடுவிரல் )நிமிர்த்தி காட்டும் முத்திரை ( ஆணவம் ; கண்மம் ; மாயை அகற்றி ஜீவாத்மாவை பரமாத்மாவோடு இணைப்பது ) 77) சீனித்தாவளம் - பெருவழியில் இரண்டு பெரிய சீனிமரங்கள் உள்ள இடம் 78) சீவேலி - சன்னதியை சுற்றி வரும் ஸ்வாமியின் ஊர்வலம் 79) சுக்குப்பாலம் - பெருவழியில் உள்ள ஒரு பாலத்தின் பெயர் 80) தலப்பாற மலா - பெருவழியில் உள்ள கோவில் இதற்கு அரசுமுடிக்கோட்டை என்ற பெயரும் உண்டு 81) தாழமண் குடும்பம் - ஐயப்பனுக்கு செய்யும் பூஜைகளுக்கு தலைமை பொறுப்பேற்கும் நபர் 82) திரிவேணி சங்கமம் - பம்பையில் மூன்று நதிகள் சங்கமிக்கும் இடம் 83) திருவெள்ளக்காவு ; சாமரவட்டம் ; நெட்டிசேரி - கேரளாவில் சாஸ்தா கோவில் உள்ள இடங்கள் 84) பறைக்கொட்டி பாட்டு - பக்தர்களின் தோஷம் விலக மாளிகைபுறத்தம்மன் சன்னதியில் செய்யப்படும் வழிபாடு 85) பாண்டித்தாவளம் - மாளிகைபுறம் சன்னதி அருகே மதுரை நாட்டில் இருந்து வரும் பக்தர்கள் தங்கும் இடம் 86) பஸ்மக்குளம் - சபரிமலை அடிவாரத்தில் இருக்கும் புண்ய தீர்த்த குளம் 87) உரல்குழி தீர்த்தம் - சன்னிதானத்தில் இருந்து 1கி.மீ தொலைவில் கும்பளம்தோட்டில் உள்ள அருவி 88) நடை - சன்னிதானம் 89) பிரதிஷ்டை தினம் - வைகாசி மாதத்தில் ஹஸ்த நட்சத்திரத்தில் சபரிமலை ஐயப்பன் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக ஐதீகம் அன்று ஒருநாள் மட்டும் நடை திறக்கப்பட்டு தரிசனம் கிடைக்கும் 90) பெரிய கருப்பர் - ஐயப்பனின் பாதுகாவலர் 91) பெருநாடு ஐயப்பன் கோவில் - பத்தனந்திட்டாவில் இருந்து சபரிமலை செல்லும் வழியில் மடத்துக்குழி என்ற இடத்தில் இருந்து 2கி.மீ தொலைவில் உள்ள ஐயப்பன் கோவில் இங்கு பெண்கள் ஐயப்பனை தரிசனம் செய்யலாம் ஐயப்பனுக்கு திருவாபரணம் இங்கும் அணிவிக்கப்படுகிறது 92) பொன்னம்பல மேடு - தை சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சி தரும் மகரஜோதி தெரியும் மலை 93) நாயாட்டு விளி - பதினெட்டாம்படியின் கீழ் நடத்தப்படும் சாஸ்தாவின் கதையை பாடும் ஒரு சடங்கு 94) மகரஜோதி - ஐயப்ப தரிசனத்தின் சிகர நிகழ்ச்சி பொன்னம்பல மேட்டில் தெரியும் ஜோதி 95) மகர நட்சத்திரம் - மகர ஜோதிக்கு சில நிமிடத்திற்கு முன்பு வானில் தெரியும் நட்சத்திரம் 96) கிருஷ்ண பருந்து - ஐயப்பனின் ஆபரணபெட்டியோடு சேர்ந்து வானில் வட்டமிட்டு பறந்து வரும் கருடன் 97) மகர சங்கரம பூஜை - தைமாதம் முதல் தேதி சூரியபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு கடக்கும் நேரத்தில் நடத்தப்படும் பூஜை 98) மகாகாளன் ; பீமரூபன் - சாஸ்தாவின் முக்கிய பரிவாரங்கள் 99) மேல்சாந்தி - முக்கிய அர்ச்சகர் புறப்படா சாந்தி என்ற பெயரும் இவருக்கு உண்டு பதவி ஏற்றதில் இருந்து வீட்டிற்கு செல்லாமல் சபரிமலையில் இருப்பதால் இவருக்கு இந்த பெயர் 100) மண்டல காலம் - கார்த்திகை முதல்தேதி முதல் மார்கழி 11ம்தேதி வரை உள்ள நாட்கள் 101) மரக்கூட்டம் - சபரிபீடத்திற்கு அடுத்த இடம் 102) விரி - தங்கும் இடம் 103) சுப்ரபாதம் - ஐயப்பனின் திருப்பள்ளியெழுச்சி பாடல் 104) ஹோமகுண்டம் ( அக்னிகுண்டம் ) - நெய்யபிஷேகம் செய்த பிறகு தேங்காய் மூடிகளை அர்ப்பணம் செய்யும் ஆழி 105) நெய்யபிஷேகம் - ஐயப்பனுக்கு செய்யப்படும் முக்கிய அபிஷேகம் 106) நெய்த்தேங்காய் - ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்வதற்கு பக்தர்கள் அடைத்து செல்லும் காய் 107) நெரபுத்திரி - அறுவடைத் திருநாள் பூஜை 108) விஷூ - மலையாள வருடப்பிறப்பு 109) விஷூ கைநீட்டம் - ஆண்டுதோறும் நல்லது நடக்க ஐயப்பன் பாதத்தில் வைத்து பூஜித்த காசுகளை அர்ச்சகர் கையால் பெறும் சடங்கு 110) அஷ்டாபிஷேகம் - ஐயப்பனுக்கு செய்யும் எட்டு வகை அபிஷேகங்கள் 111) படி பூஜை - சபரிமலையில் உள்ள சத்யமான பொன்னு பதினெட்டு படிகளுக்கு நடத்தப்படும் பூஜை 112) ஸ்ரீபூதநாத சரிதம் - ஸ்ரீ கூ.மு. முத்துஸ்வாமி சாஸ்திரிகள் எழுதிய ஐயப்பனை பற்றிய சமஸ்க்ருத நூல் 113) ஹரிஹராத்மஜாஷ்டகம் - அர்த்தசாம பூஜைக்கு முன் நடைசாத்தும் முன் பாடப்படும் பாடல் 🌻♻️🌻♻️🌻♻️🌻♻️🌻♻️🌻♻️