சீனாவில் நடந்த ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக வாகையர் தொடரில் ஆடவருக்கான 1,000 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டுவீரர் அன்புமகன் ஆனந்த்குமார் வேல்குமார் தங்கப்பதக்கம் வென்ற செய்தியறிந்து மிகுந்த பெருமிதம், அடைந்தேன்.
உலக வாகையர் தொடரில் முதலிடம் பிடித்ததன் மூலம் ஸ்பீடு ஸ்கேட்டிங் விளையாட்டில் இந்தியாவிற்கான முதல் தங்கப்பதக்கம் வென்ற வீரர் என்ற பெருமையை அன்புமகன் ஆனந்தகுமார் வேல்குமார் பெற்றுள்ளது பெருமகிழ்வைத் தருகின்றது.
அன்புமகன் ஆனந்தகுமார் வேல்குமார் மேலும், பல பன்னாட்டு போட்டிகளில் வென்று சாதனை புரிவதன் மூலம், பிறந்த தமிழ் மண்ணிற்கும், தமிழ் இனத்திற்கும் அளப்பரிய பெருமை சேர்க்க வேண்டுமென விழைகிறேன்.
அன்புமகன் ஆனந்தகுமார் வேல்குமார் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், வாழ்த்துகளும்!
- செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி
#சீமான் அறிக்கை