#✈️ இந்திய விமானப்படை தினம் ✨ விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சஞ்சீவி மலை யில் தேசியக் கொடி ஏற்றி சாதனை படைக்கப்பட்டது.
*1932- அக்டோபர் 8 தேசியக் கொடி பறக்க விடப்பட்டது*
மலை உச்சி யில் சுமார் 100 அடி சுற்றளவும், 60 அடி உயரமும் கொண்ட ராமர் கல் மேல் இந்தக் கொடி ஏற்றப்பட்டது. ராமர் கல்லை தொலைவில் இருந்து பார்த்தால் தனியாக நிற்பது போல் காட்சி தரும். இந்த கல்லில் அப்போதைய சுதந்திரப் போராட்ட வீரர்கள் தேசியக் கொடி ஏற்றிவிட வேண்டும் என்ற தாகத்துடன் இருந்தனர்.
ஆனால் அப்போது தெருக்களில் தேசியக் கொடி ஏற்றினால் போலீசார் அகற்றி விடுவர் நகரில் எங்கும் கொடி பறக்க தடை இருந்த காலம் அது.
இளம் தொண்டர்களான
டி.பி.ராமசாமி . சுப்பராஜா, சக்கராஜா, வேல், ராமையா , கந்தசாமி மற்றும் அப்போது 12 வயது சிறுவனாக இருந்த வசந்தன் ஆகியோர் இராமர் கல்லில் ஏற முடிவு செய்து, அதற்குண்டான ஏணி தயார் செய்ய திட்டமிட்டனர். அது இயலாத காரியம் எனக் கருதி இரண்டு தினங்களுக்கு முன்பே அவர்கள் அதிகமான உயரம் கொண்ட மூங்கில் கம்புகள் பலவற்றை எடுத்துக் கொண்டனர். அக்கம்புகளில், வெட்டப்பட்ட கிளைகள் அனைத்தையும் படிக்கட்டுகள் போல் இருக்கும் படியாக தயார் செய்து, மூங்கில் கம்புகளையும், பெரிய விளக்குகள், சுத்தியல், கடப்பாரை போன்ற பொருட்களுடன், இராமர் கல் பகுதிக்கு சென்றனர். கல்லின் உச்சியில் ஏறும் பணியினை இருவர் ஏற்றுக்கொண்டு மூங்கில் கம்புகளையும் கட்டி ஒரே கம்பாக மாற்றி இராமர் கல்லின் இருகில் உள்ள மொட்டைப் பாறையில் சாய்த்து வைத்து இருவரும் இராமர் கல்லில் ஏறினர். ஒரு சிறு நடுக்கம் கண்டாலும் கீழே விழுந்து உயிர் விட வேண்டிய நிலை. பாறையின் கீழே நால்வர் தங்களது கரங்களால் இறுக்கிப் பிடித்துக் கொள்ள வசந்தன் ஒவ்வொரு பொருளாக எடுத்துக் கொடுத்தார். இரண்டு மணி நேர தீவிர முயற்சியால் இரவோடு இரவாக, ஒரு பெரிய அளவில் உள்ள தேசியக் கொடியினை இராமர் கல்லின் உச்சியில் கம்பி பதித்து, அதில் கொடி ஏற்றி பறக்க விட்டனர். ஏறக்குறைய அதிகாலை 2 மணி வரை இருந்துவிட்டு நகருக்கு அந்த குழு திரும்பிவிட்டனர்.
விடியும் பொழுது, இராமர் கல் உச்சியில் உள்ள தேசியக்கொடி பறப்பதை ஒட்டுமொத்த ஊர்மக்கள் ஆச்சரியத்தோடும், மகிழ்ச்சியோடும், வியந்து பார்த்துக்கொண்டிருந்தனர். இதைக் கேள்விப்பட்ட நகரின் சப்-இன்ஸ்பெக்டர் தன்னிடம் நகரில் பல வாரங்களாக முகாமிட்டுள்ள துப்பாக்கி ஏந்திய ரிசர்வ் போலீஸ் படையினை இராமர் கல்லுக்குக் கூட்டிச் சென்று எப்படியாவது மேலே ஏற்றிய கொடியினை பிடுங்கிவிட முயற்சித்து ஏமாந்துபோய், கடைசியில் இராமர் கல்லினை சுற்றி 60 துப்பாக்கி ஏந்திய போலீசாரை தேசியக் கொடியினை நோக்கி சுட ஆணையிட்டார். கொடி மிகப் பெரியது என்பதால் அதனை ஒன்றும் செய்ய முடியவில்லை. மாறாக கொடியில் சிறு ஓட்டைகளை மட்டுமே போட முடிந்தது..முயற்சி தோல்வியுற்ற நிலையில், போலீஸ் படை திரும்பிச் சென்றது. பல மாதங்கள் வரை அந்த தேசியக் கொடி இராமர் கல்லில் பறந்த வண்ணமாய், நாளைக்கு கிடைக்கும் விடுதலைக்காக சுடர் விட்டுக் கொண்டிருந்தது