*தேவீ நாராயணீயம்*
*தசகம்-3*
புதிய தொடர் பதிவு!
41 தசகங்களை கொண்ட இந்த தேவி நாராயணீயம் பலேலி நாராயணன் நம்பூதிரியால் இயற்றப்பட்டது.
நாராயணீயம், ஸ்ரீமத் பாகவத கதைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது போல, இது தேவி பாகவதத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது.
*மஹகாளி அவதாரம்*
5) இதம் ஸமாகர்ண்ய பயாத் விரிஞ்சஹ ஸுஷுப்தி நிஷ்பந்தம் அமோகசக்திம் ப்ரபோதனார்த்தம் ஹரிமித்தபக்த்யா துஷ்டாவ; நைவாசலதம்பு ஜாக்ஷஹ
பொருள்: பயந்து போன ப்ரம்மா, 'இந்த அஸுரர்களுடன் சண்டை போடுவது நம்மால் முடியாத காரியம். எனவே நம்மைக் காப்பாற்றிக் கொள்ள தூங்கும் விஷ்ணுவை எழுப்புவதே ஒரே வழி. நம்மைக் காப்பாற்ற அவரால் தான் முடியும்' என்று தாமரைத் தண்டினுள் சென்று விஷ்ணுவ, "நாராயணா! கோவிந்தா! மதுசூதனா! ஆபத்பாந்தவா! அனாதரட்ஷகா! என்று பலவித நாமங்களால் அழைத்தார்.
6)அஸ்பந்ததா த்வஸ்ய கயாபி சக்த்யா க்ருதேதி மத்வா மதிமான் விரிஞ்சஹ ப்ரபோதயைனம் ஹரி மேவமுக்த்வா ஸ்தோத்ரைர் விசித்ரைர் பவதீமனௌஷீது
பொருள்: எவ்வளவு அழைத்தும் அவர் எழுந்திருக்கவில்லை. அவர் என்ன செய்வார்? பாவம், அவரை அப்படி ஆழ்ந்த நித்திரையில் ஆழ்த்தியது நித்ரா சக்தி அல்லவா? 'அவர் இப்பொழுது நித்ரா சக்தியின் வசத்தில் இருக்கிறார். அதனால்தான் நான் அழைத்தும் எழுந்திருக்க முடியவில்லை' என்று யோசித்து அந்த ஆதிசக்தியான மஹாமாயாவைச் சரணடைகிறார். "தாயே! உன்னைப் பணிந்தேன். நான் ஆபத்தில் இருக்கின்றேன். என்னைக் காப்பாற்று. நீ என்னைக் காப்பாற்ற நினைத்தால் இந்த விஷ்ணுவை எழுப்பு. இல்லையேல் என்னையோ அல்லது அஸுரர்களையோ கொன்று விடு. என்னைக் காப்பாற்ற நினைத்தால் ஏன் இந்த அஸுரர்களைப் படைத்தாய்? என்னைக் காப்பது உன் கையில் தான் இருக்கிறது" என்று வேண்டினார்.
தொடரும்... 🚩🕉🪷🙏🏻
#நாராயணீயம #🙏அம்மன் துணை🔱 #இந்து பெண் தெய்வங்கள் #🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்