ஒரு பறவையை சிறைப்பிடிக்கும்
போது அதன் வானத்தையும்
சிறைப்பிடித்து
விடுகிறார்கள் மனிதர்கள்..
பின் அது தனககு இறக்கை
இருப்பதையே மறந்து அந்த கூண்டின்
முழுப் பரப்பையும் தன்
கால்களால் நடந்தே தாண்டுகிறது..
அதிகாலை எழுந்து உணவு
தேடிப் பழக்கப்பட்ட பறவை கூண்டின்
வாசலில் காத்திருக்கிறது
உணவுக்காக..
பின் தன் மொழி மறந்து
இவர்களுக்காக
கொஞ்சம் பேசவும் கற்றுக் கொள்கிறது ..
உண்மைதான் மனிதன் அன்பெனும் தூண்டிலை வீசி சக மனிதனையே
சிறைப்படுத்தும் வல்லமை படைத்தவன் ஆயிற்றே ..
பறவைகள் இவனுக்கு எம்மாத்திரம் சிறைப்படுத்துவது மட்டுமல்ல அதனது
போக்கில் பறக்க விடுவதும் அன்பு தான்..
#❤️எங்கேயும் காதல் #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #✍️Quotes #💞Feel My Love💖