O Panneerselvam
752 views
1 years ago
வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், என பன்முகத் தன்மை கொண்டுவரும், கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரருமான வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் 153-வது பிறந்த நாள். அவருடைய எழுத்துகள் மூலம் மக்களிடத்தில் சுதந்திர பற்றை வளர்த்தவரும், தமிழ் மொழிக்காக பல கட்டுரைகளையும், செய்யுள்களையும் தந்தவரும். ஆங்கிலேயர் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி கடல்வழிப் போக்குவரத்தை ஏற்படுத்தியவருமான வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் வீரத்தையும், தியாகத்தையும், நாட்டு பற்றையும் போற்றி வணங்குவோம். #அதிமுக