ஜெகபர் அலி – யாஸ்மின் இணையரின் 6 வயதேயான அன்பு மகன் சயான் அரிய வகை தசைநார் சிதைவு நோயால் [Duchenne Muscular Dystrophy (DMD)] பாதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அரிதினும் அரிதான அக்கொடிய நோயிலிருந்து விடுபட்டு, முற்றிலும் குணமடைய மருத்துவச் சிகிச்சைக்கு இந்திய மதிப்பில் சுமார் 25 கோடி ரூபாய் தேவைப்படுவதால், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஜெகபர் அலி – யாஸ்மின் இணையர் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 7 வயதிற்குள்ளாக நோய் தீர்த்து உயிர்காக்கும் ஊசியை செலுத்தினால் மட்டுமே நோயிலிருந்து முற்றிலுமாகக் குணமாக்க முடியும். சிறிய வயதில் கொடு நோயுடன் போராடிக்கொண்டிருக்கும் அன்பு மகன் சயான் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7 வயதை நிறைவு செய்ய உள்ள நிலையில், அதற்குள் 25 கோடி ரூபாய் திரட்ட வேண்டிய அவசர அவசியத் தேவை உள்ளது. குழந்தையின் உயிர் காத்திட 25 இலட்சம் பேரிடம் 100 ரூபாய் வீதம் திரட்டும் மருத்துவ நிதியுதவிக்கான திரள் நிதி பரப்புரையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, தாய்த்தமிழ் உறவுகள் தங்களால் இயன்ற நிதி உதவியை அளித்து அன்பு மகன் சயானை அரிய வகை நோயிலிருந்து காப்பாற்ற உதவிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
வங்கி கணக்கு விபரம்:-
Acc. No.: 00000044106004022
Acc. Name: MOHAMMED MEERAN
IFSC: SBIN0004272
#சீமான்