saravanan.
970 views
#sirappaana Eduthurayppu. சோறு போட_ _*ஒருவர் இருக்கும் வரை..*_ _சாப்பிட்டாயா எனக் கேட்க_ _*ஒருவர் இருக்கும் வரை..*_ _தாமதமாகும் இரவுகளில்_ _எங்கிருக்கிறாய் என விசாரிக்க_ _*ஒருவர் இருக்கும் வரை..*_ _நோய் வந்தால் இரவுகளில்_ _கண் விழித்துப்_ _பார்த்துக் கொள்ள_ _*ஒருவர் இருக்கும் வரை..*_ _குரல்_ _மாறுபாட்டில் மன_ _நிலையைக்_ _கணிக்க_ _*ஒருவர் இருக்கும் வரை..*_ _போய்ச்_ _சேர்ந்ததும்_ _அழைப்பெடு என_ _வழியனுப்ப_ _*ஒருவர் இருக்கும் வரை..*_ _வீட்டைக்_ _காத்திருந்து கதவு திறக்க_ _*ஒருவர் இருக்கும் வரை..*_ _தோற்றுப் போய்_ _திரும்புகையில்_ _தோள் சாய்த்துக் கொள்ள_ _*ஒருவர் இருக்கும் வரை..*_ _போ என்றாலும்_ _விட்டுப் போகாது_ _சண்டை போட்டுக் கொண்டேனும்_ _உடனிருக்க_ _*ஒருவர் இருக்கும் வரை..*_ _மனம் கனக்கும்_ _நினைவுகளைப்_ _பகிர்ந்து_ _கொள்ள _*ஒருவர் இருக்கும் வரை..*_ _நம் கனவுகளை_ _தம் கனவுகளாகத்_ _தோள்களில்_ _தூக்கி சுமக்க_ _*ஒருவர் இருக்கும் வரை..*_ _எதற்காகவும்_ _எவரிடமும்_ _நம்மை விட்டுக் கொடுக்காத_ _*ஒருவர் இருக்கும் வரை..*_ _கூட்டத்தின்_ _நடுவே தனித்துப்_ _போகையில்_ _கரங்கள் பற்றி_ _நானிருக்கிறேனென உணர்த்த_ _*ஒருவர் இருக்கும் வரை..*_ _தவறுகளைத் தவறென_ _சுட்டிக் காட்டித் திருத்தும்_ _*ஒருவர் இருக்கும் வரை..*_ _துயர் அழுத்தும்_ _கணங்களில்_ _அருகிருந்து கண்ணீர்த் துடைக்க_ _*ஒருவர் இருக்கும் வரை..*_ _மனக்_ _குறைகளைப் புலம்பித்_ _தள்ளுகையில் காது கொடுத்துக் கேட்க_ _*ஒருவர்*_ _*இருக்கும் வரை*_ _*மட்டுமே..*_ _*வாழ்வு வசந்தமானது!*_