சீமான் மகன் படிக்கும் பள்ளி பற்றி தெரியுமா?
சென்னையில் (தரமணியில்) உலகத் தரத்திலான ஒரு பள்ளி உள்ளது.அதன் பெயர் இன்டர்நேஷனல் பக்கலோரியட் (International Baccalaureate—IB) எனப்படும். இதை லோக்கலாக அமெரிக்கன் ஸ்கூல் என்று கூறுகிறார்கள்.
இப்பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி மட்டுமே அளிக்கப் படுகிறது!
மொழிப்பாடம் என்ற முறையில் ஆங்கிலம் பிரெஞ்சு ஸ்பானிஷ் ஆகிய மொழிகள் மட்டுமே கற்பிக்கப் படுகின்றன.
தமிழுக்கு அங்கே அறவே இடமில்லை!!
தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ளது.
இங்கே மழலையர் வகுப்பிற்கும் முந்தைய நிலையிலேயே கட்டணம் 4000 $ ரூபாய் 3,70,000 !
பள்ளி வளர்ச்சிக் கட்டணம் 12,000 $
அதாவது, 11,08,446 (பதினோரு லட்சத்து எட்டாயிரத்து நானூறு) ரூபாய்!!!
அமெரிக்க டாலர்களில் மட்டுமே செலுத்தப்பட வேண்டும்.
ஒரே ஓர் ஆண்டு கட்டண விவரம்—மழலையர் வகுப்பிற்கு முந்தைய (இரண்டரை வயதேயான) பிள்ளைகளுக்கு--- 14,630$
(சுமார் பதின்மூன்றரை லட்சம் ரூபாய்)
கே.ஜி. முதல் 5 வகுப்பு வரைக்கான ஆண்டுக் கட்டணம்---
28, 730$ (26 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்)
6 முதல் 8 வகுப்புவரைக்கான ஆண்டுக் கட்டணம்---
29,415$ (27 லட்சத்துப் பதினாறாயிரம் ரூபாய)
9 முதல் 12ம் வகுப்பு வரைக்கான ஆண்டுக் கட்டணம்---
33,045 $ (30 லட்சத்து 51ஆயிரம் ரூபாய்)
மொத்தம் 665 பிள்ளைகள் படிக்கிறார்கள் அமெரிக்க நாட்டுக் குடிகள் 94 பேர்.
இந்தியர்கள் 57 பேர்.
பிற நாட்டினர் 514 பேர்.
இந்தப் பள்ளியில் பயிலும் 57 இந்திய மாணவர்களில் இரண்டு மாணவர்கள் யார் தெரியுமா?
நாம் தமிழர் சீமானின் மகனும், அவரது மைத்துனி மகனும்!!!!
ஆனால் சீமான் தேர்தல் அறிக்கை?
“தொடக்கக் கல்வி முதல் உயர் படிப்பான மருத்துவம், சட்டம், பொறியியல் வரையிலுமான அனைத்துப் பாடங்களும் தமிழ் மொழியிலேயே கற்றுத் தரப்படும்.
தமிழ்வழிக் கல்வியே சட்டமாக்கப் படும்.
தமிழ் பயிற்றுமொழி.
ஆங்கிலம் கட்டாயப் பாட மொழி.
இந்தி உட்பட உலக மொழிகள் அனைத்தும் விருப்ப மொழி.
ஒரு மொழிக் கொள்கையே பின்பற்றப் படும்".
ஒரு இடத்தில்
“என் பிள்ளைகள் ஆங்கில வழியில் படிக்கிறார்கள். எனக்கே அவமானமாக உள்ளது,” என்று மட்டும் கூறிவிட்டு தமிழன் சீமான் ஓடி விடுகிறார்.
சீமான் பிள்ளைகள் எத்தகைய உலகத் தரம் வாய்ந்த அமெரிக்கப் பள்ளியில் எத்தனை லட்சங்கள் கொட்டிப் படிக்க வைக்கப் படுகிறார்கள் என்பது பற்றியும் தமிழ்மொழியை ஒரு மொழிப்பாடமாகக் கூட அவர்கள் பயிலவில்லை என்பதைப் பற்றியும் தமிழ்மக்கள் பலரும் அறிந்திடுமாறு செய்ய நீங்கள் தான் உதவ வேண்டும்.
பேராசிரியர் மருதமுத்து பதிவு
இவ்வளவு காசு இவருக்கு தொடர்ந்து எங்கிருந்து வருகிறது? இவரது பணம் RSS வட்டாரங்களில் இருந்து வருகிறது. கடந்த 14 வருடமாக இவருக்கு தமிழ்நாட்டில் ஒரே ஒரு வேலை தான். காங்கிரஸ் பெயரை கெடுப்பது. எதை பேசினாலும் காங்கிரஸ் தமிழர்களின் எதிரி என்ற ஊதி பெரிதாக்கப்பட்ட கதையை பத்தாயிரம் முறை மீண்டும் மீண்டும் பேசி கொண்டு இருப்பதற்காக இவர் RSS ஆல் தொடர்ந்து ஏவப்பட்ட ஏவுகணை தான் சீமான். காங்கிரஸ் தமிழக மக்களுக்கு கட்டிய அரசு பள்ளிகள், அணைகள், ராஜீவ் காந்தி வித்திட்ட தகவல் தொழில்நுட்ப புரட்சி மற்றும் தொலைதொடர்பு புரட்சியால் தமிழகம் இன்று லட்சக்கணக்கான சாப்ட்வேர் இன்ஜினியர்களுடன் பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டம் முதல் நூறு நாள் வேலை திட்டம் வரை காங்கிரஸ் தமிழக மக்களுக்கு செய்த நல்ல திட்டங்களை பேசவே மாட்டார்.
ஆபரேஷன் பூமாலை மூலம் 25 டன் உணவை ஈழத்தமிழர்களுக்கு வழங்கிய ராஜீவ் காந்தி பற்றி பேச மாட்டார். ஈழ போரில் ஈழ தமிழர்களுக்காக உயிர் விட்ட 1100 இந்திய வீரர்கள் பற்றி பேச மாட்டார். அதில் யாரோ 2 இந்திய வீரர்கள் ஈழ பெண்களிடம் தவறாக நடந்து கொண்டார்கள் என்று பத்தாயிரம் முறை பேசி வருகிறார் கடந்த 14 வருடங்களாக. ஆனால் இங்குள்ள ஈழத்து மக்களுக்கான அகதிகள் முகாமுக்கு ஒரு முறை கூட சென்று எட்டிப்பார்த்தது இல்லை இந்த சீமான்.
இந்த RSS கைக்கூலி, பாசிசவாதி போலவே வாயை திறந்தால் பொய், பழம் பெருமை, சாதி ஆணவக்கொலைக்கு எதிராக குரல் கொடுக்காமல் அதை குடி பெருமை கொலை என்று சொல்லி தமிழ் மக்களை ஏற்று கொள்ள முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்.
இறுதியாக ஏப்ரல் 2025 SRM நிகழ்வில் மோடி உலகம் முழுவதும் தமிழை வளர்க்கிறார் என்று ஒரு போடு போட்டார் பாருங்கள்! அடுத்த ஜுன் 2025 தந்தி டிவி பேட்டியில் "மோடி கடின உழைப்பாளி" என்றார். அடுத்து பிராமணர்கள் பாகுபாடு பார்க்காதவர்கள் என்று புகழ்ந்து பேசுதல் இதெல்லாம் அவர் RSS கைக்கூலி என்பதற்கான சிறந்த உதாரணம். இதன் மூலம் தனது 14 வருட நாடகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார் சீமான்.
சீமானை அறிவோம்.
தமிழ் மக்களுக்கு அதை எடுத்துரைப்போம்!
சுபத்ரா தேவி தனசிங்
#மூக்கு நோன்டியும் நொடிக்கு முன்னூறு பொய்களும் ச்சீ மானிசம்