சயம் என்றால் தேய்தல் என்று பொருள், அட்சயம் என்றால் தேயாத, குறையாத என்ற பொருள். பாரதத்தில் பாஞ்சாலியிடமும் மணிமேகலையில் மணிமேகலையிடமும் அப்படி ஒரு அட்சய பாத்திரம் இருந்ததாக சொல்கின்றது குறிப்புகள்
அமாவாசைக்கு அடுத்த மூன்றாம் நாள் திரிதியை, திரி என்றால் மூன்று என பொருள். ஆங்கிலத்திலும் அதுவேதான்.
இந்த சித்திரை மாத பவுர்ணமி போலவே இந்த பிறை தோன்றும் திரிதியையும் விஷேஷமானது
அள்ள அள்ள குறையாத திரிதியை என இந்த அட்சய திரிதியை கொண்டாடபடுகின்றது
இந்நாளில் பரசுராமர் பிறந்தார். கண்ணன் பாஞ்சாலிக்கு அட்ச்யபாத்திரம் அளித்தார், இதே நாளில் பாஞ்சாலி சேலை துரியோதனன் அவையில் வளர்ந்தது. குசேலனுக்கு செல்வம் கிடைத்தது என ஏகபட்ட விஷயங்கள் உண்டு
பகீரதன் என்பவன் இந்நாளில்தான் கங்கையினை அழைத்து வந்தான்
செல்வங்களுக்கு அதிபதியான லட்சுமியின் நாள் இது என்றும் சில குறிப்புகள் சொல்கின்றன. பல இடங்களில் மகாலட்சுமி பூஜையும் நடக்கும்
சமணர் கூட அவர்களின் ஒரு தீர்த்தங்காரர் அவதார நாள் என கொண்டாடுகின்றார்கள்
இந்நாளின் தத்துவம் வேறு ஒன்றுமல்ல, அட்சயம் என்றால் குறையாது என பொருள், அந்நாளில் அள்ளிகொடுங்கள் இல்லாதவருக்கு கொடுங்கள் உங்களுக்கு ஒன்றும் குறைவுபடாது என்பதேயன்றி வேறல்ல
இந்நாளில் தான தர்மம் செய்தால் பெரும் புண்ணியம் ஏற்படும் என்ற நம்பிக்கையும் உண்டு
அக்காலத்தில் இந்நாளில் பித்ருக்கள் எனப்படும் முன்னோருக்கு பூஜை செய்துவிட்டு வம்சம் செழிக்க மணப்பெண்ணை முதன் முதலாக ஆலயத்தில் பார்க்கும் சம்பிரதாயம் எல்லாம் நடந்திருக்கின்றன
வசந்தகால தொடக்கமாக இக்காலம் வாங்கி மகிழும் பண்டிகையா அன்று இருந்தது. இந்நாளில் வாங்கினால் அப்பொருள் பெருகிகொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை
இந்நாளில் கால்நடைகள் வாங்குவார்கள் என்பது அக்கால வழக்கம், அது பலுகிபெருகுமாம்
கால்நடை என்றல்ல உடை, மனை, பாத்திரம், அரிசி, உப்பு என மகா முக்கியமான பொருளை வாங்குவார்கள் இதில் கடைசியாக வந்ததுதான் தங்கம்
ஆனால் இன்று அட்சய திரிதியை என்றாலே தங்கம் வாங்கும் நாள் என வியாபார உலகில் மாற்றிவிட்டார்கள்
இன்று தங்கம் வாங்கினால் அது பெருகும் என்ற நம்பிக்கை வந்தாயிற்று, தங்கம் மட்டுமல்ல எது வாங்கினாலும் பெருகும் என்பதுதான் பழங்கால நம்பிக்கை
தங்கம் மட்டுமல்ல எது அவசியமோ அது எல்லாம் வாங்கலாம் , அக்காலத்தில் நிலம், தங்கம், மாடு என முக்கால செல்வங்களை மக்கள் வாங்கினார்கள். இவை எக்காலமும் அழியா செல்வங்கள் என்பது உண்மை
இன்று தங்கம் மட்டும் வாங்கும் பண்டிகையாக அது மாறிவிட்டது, அட்சய திரிதியை என்றாலே தங்கம் மட்டும் என்பது போல் விளம்பரமாயிற்று
அட்சய திரிதியியையினை கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துக்கள்
தமிழகத்தில் அவசியம் கொண்டாட வேண்டிய இடம் காவேரிகரை போன்ற நீர் நிலைகள், அங்கு கொஞ்சம் நீர் வைத்து பூஜிப்போம்
பாஜகவினர் தமிழகத்தில் புதிய கட்சிபணிகளை இந்நாளில் தொடங்கட்டும் , தமிழகத்தில் அவசியமாக வளர வேண்டியது தேசிய உணர்வுதான். அட்சய திரிதியை நன்னாளில் தேசிய உணர்வு பெருக வாழ்த்துவோம்
தங்கம் மட்டும் வாங்க வேண்டும் என ஒரு வியாபார தந்திரத்துக்குள் இச்சமூகம் சிக்கிவிட்டது
இந்நாளில் தங்கம் மட்டுமல்ல எல்லாமும் வாங்கலாம், கோவிலுக்கு சென்று துளசியும் குங்குமமும் வாங்கினால் எல்லா வளமும் வந்தடையும்
கோவிலுக்கு சென்று விளக்கிட்டு தூபமிட்டு பூக்களிட்டு வணங்கி வந்தாலே, குங்குமம் பெற்றுவந்தாலே போதும் எல்லா நலமும் வளமும் கைகூடும்
தங்கம் வாங்கலாம் தவறில்லை, ஆனால் அதற்கு முன் கோவிலுக்கு சென்று துளி குங்குமம் பெற்றுகொள்வது உகந்தது, உன்னதமானது
#my status #🙏ஆன்மீகம் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🙏கோவில்