நண்பர்களே ஒரு முக்கியமான விஷயத்தை இந்த முகநூல் தளத்தில் பதிவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் இந்த பதிவை பதிவிடுகின்றேன் அரசாங்க அலுவலகங்களில் லஞ்ச லாவண்யம் இல்லாமல் எந்த காரியம் நடக்காது என்பது அனைவரும் அறிந்ததே இது இப்பொழுது இருக்கிற திரு ஜோசப் விஜய் முதல் திரு நரேந்திர மோடி ஜி வரைக்கும் அனைவரும் அறிந்ததே எந்தத் துறை என்று நான் இதில் பதிவிட மாட்டேன் இருந்தாலும் சொல்கின்றேன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சுமார் மூன்று லட்ச ரூபாய் ஆகும் என சொன்னார்கள் ஆனால் இன்று அதே வேலை மீண்டும் தேவைப்பட்டது அதே அலுவலகத்தை நாடினேன் வெறும் 2500 ரூபாய் பீஸ் மட்டும் கட்டினால் போதும் பணம் தேவையில்லை என்று கூறி விட்டார்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை நம்ப முடியவில்லை அதேபோல மற்றொரு அரசு அலுவலகப் பணிக்காக மற்றொரு துறையை சந்திக்க வேண்டி இருந்தது அவர்களும் இதே பதிலை சொன்னார்கள் என்ன நடக்குது தமிழகத்தில் என ஒன்றும் புரியவில்லை இல்லை அரசாங்கம் தான் இவர்களை திருத்தி விட்டதா அல்லது இவர்கள் திருந்தி விட்டார்களா? சந்தேகமாக இருக்கிறது ஆனால் இந்த அரசாங்கம் இதே போல செயல்பட்டால் ஐந்து ஆண்டுகள் என்ன 50 வருடங்களுக்கு இந்த அரசாங்கம் தான் இருக்கும் மக்கள் மத்தியில் கண்டிப்பாக நல்ல பெயர் எடுக்கும் என்பதில் ஆச்சரியத்திற்கு ஒன்றும் இல்லை ஏதோ எனது மனதில் பட்டது பதிவிட வேண்டும் என தோன்றியது பதிவிடுகின்றேன் நான் எந்த அரசியல் கட்சியும் சாராதவன் எனது தொகுதியில் எந்த வேட்பாளர் நிக்கிறாரோ நல்லவரா என்று பார்த்து கட்சி மத பேதம் இல்லாமல் ஓட்டளிக்க கூடியவன் ஏதோ மனதில் பட்டது பதிவிட்டுள்ளேன் நன்றி நண்பர்களே.. #தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல்#🤵விஜய் அண்ணா வெறியன்ஸ்#தளபதி விஜய் ரசிகர்கள்#இந்தியாவின் தினம் ஒரு தகவல்#தளபதி விஜய்