Samsudeen
546 views
14 hours ago
*அரசியல் புரிதல்கள்..!* *கப்ளிசேட்* ⚖️🔮 *அரசியல் புரிதல் -2* *இங்கு யாரும் ஹீரோவும் இல்லை!* *இங்கு யாரும் ஜீரோவும் இல்லை!* இன்றைய இந்திய அரசியலின் எதார்த்த நிலையை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். எல்லா அரசியல் கட்சிகளும் மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை கட்டமைப்புகளை உருவாக்கி வைத்துள்ளது. இந்தியாவில் அன்றைய காங்கிரஸ், இன்றைய பா.ஜ.க போன்ற கட்சிகள் தேசிய அளவில் கட்டமைப்புகளை உருவாக்கி ஒவ்வொரு கிராமம் வரை கிளைகளை பரவச் செய்துள்ளது. இதில் காங்கிரஸ் தனது வேர்களை இழந்துள்ளது. பல மாநிலங்களில் வலுவிழந்துள்ளது. நேர்மாறாக பா.ஜ.க ஒவ்வொரு கிராமத்திலும் தனது கிளைகளை பரவலாக உருவாக்கி உள்ளது. தமிழகத்தை பொறுத்த வரையில் திமுகவும், அதிமுகவும், ஒவ்வொரு கிராமத்திலும் தங்கள் கட்டமைப்புகளை வலுவாக வைத்துள்ளது. இது மிகுந்த ஆரோக்கியமானது. இதுபோன்ற கிராமப்புற அரசியல் கட்டமைப்புகள் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில் அரசியல் அதிகாரங்களை செயல்படுத்தி மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த முடியும். ஒன்றிய அரசிலிருந்து நேரடியாக நிதிகளை ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்துகளும் பெறும் வகையில் ராஜீவ்காந்தி காலத்தில் சட்டமியற்றி நிதிகள் கிராமங்கள் வரை நேரடியாக கிடைக்க வழி பிறந்தது. அதன் மூலம் சிறு கிராமங்கள் கூட பல்வேறு உள் கட்டமைப்புகளை உருவாக்கி கொண்டன. அதன் மூலம் அரசியல் கட்சிகளும், தங்கள் பிரதிநிதிகள் ஊராட்சி முதல் மாநகராட்சி வரை பரவலாக பதவியில் அமர்த்தி, இதன்மூலம் அரசுகளின் ஒருங்கிணைப் போடு, மக்களுக்கான பணிகளை Micro Level ல் செய்ய வழிவகுத்தது. இந்த சூழலில், மாநகராட்சி, நகராட்சி என்ற மட்டங்களில் இருந்த அரசியல் கட்சிகளின் ஊடுருவல்கள் பேரூராட்சி, ஊராட்சி என்று பரவலாகியது. இது ஒருவகையில் நன்மை என்றாலும் ஊராட்சி, பேரூராட்சிகளில் ஊரின் ஒற்றுமையும், கட்டமைப்பும் குலைந்தது. ஊராட்சி, பேரூராட்சி போன்ற அதிகாரங்களில் அந்த ஊரின் மிக வசதியானவர்கள், பெரியவர்கள், மரியாதைக் குரியவர்கள் போன்றவர்கள் போட்டியில்லாமல் தேர்தல் இல்லாமல் தேர்ந்து எடுக்கப்பட்டார்கள். ஊரின் அந்தப் பகுதிகளின் வளர்ச்சிக்காக, அவர்களின் திட்டங்கள், செயல்பாடுகள் சிறப்பாக இருந்தன. அவர்களின் பேச்சுக்களுக்கு ஊர்களில் மரியாதை இருந்தது. மெம்பர் சொல்லி விட்டார் என்று எல்லோரும் கட்டுப்பட்டார்கள். ஒன்றிய, மற்றும் மாநில அரசுகளிடம் இருந்து கிடைக்கும் நிதிகள் இப்போது போல் அப்போது அதிகமாக கிடைக்காது. உள்ளூரில் கிடைக்கும் வரி வருவாய்,வாடகை போன்ற வருவாய்களை வைத்து முடிந்தளவு சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால் கடந்த 20/25 ஆண்டுகளில் சிறிய கிராம ஊராட்சிகளில்கூட அரசியல்வாதிகள் உள்ளே நுழைந்தார்கள். இந்த காலகட்டத்தில் ஏராளமான நிதிகள் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து கிடைத்தன. நிதிகள் ஏராளமாக புரள, அரசியல் உள்நுழைய, உள்ளூரில் அரசியல் சண்டைகள் ஆரம்பமானது. அந்த ஊரின் பெரியவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். குப்பைகளும், கூளங்களும், தங்கள் கரைவேட்டிகளோடு களத்தில் புகுந்து எளிய மக்களுக்கான அரசியல் தளங்களான ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளை கைப்பற்றிக் கொண்டார்கள். நகரங்களில் நடப்பதைப்போலவே அரசியல் சண்டைகளும், பதவிச் சண்டைகளும், உள் குத்துகளும், வெளி குத்துகளும் ஆரம்பமாயின. இதனால் அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் அடைந்த பயன் என்ன? *தொடர்ந்து ஆறு நாட்கள் கொஞ்சம் அரசியல் பேசுவோம்..!* ⚖️🔮 *கப்ளிசேட்* *17.04.26* #💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰