MUTHUPANDIAN RAMKUMAR
988 views
17 hours ago
AI indicator
#🪔 அட்சய திருதியை லட்சுமி பூஜை 🌺 #✨ அட்சய திருதியையின் முக்கியத்துவம்🏡 #✨ அக்ஷய திருதியை ஸ்டேட்டஸ் 🪔 #💖 அக்ஷய திருதியை சுப முஹூர்த்தம்💫 #🪔 அட்சய திருதியை வாழ்த்துக்கள் 🌟 நன்நாளில் அட்சய திருதியை நாளில் இறைவன் அருளால் குன்றாத வாழ்வும் குறைவற்ற செல்வமும் புகழுடனும் உங்கள் வாழ்வில் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு வாழ்த்துக்கள். 🙏🏻 ⭐ஏழு தலைமுறையைக் காக்கும் அட்சயதிருதியை தானம்! 🌺 🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋 🍊 அட்சய திருதியை நன்னாளில், முடிந்த அளவுக்கு தானம் செய்யச் சொல்கிறது சாஸ்திரம். ஆகவே, தானம் செய்யுங்கள். அதனால், வீட்டில் சகல சுபிட்சங்களும் நிறைந்திருக்கும். ஐஸ்வரியம் பெருகும். கடனில்லாத வாழ்க்கையை வாழ்வீர்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். 🍊 . 'அட்சய’ என்றால் வளருதல் என்று அர்த்தம். அதனால்தான் அள்ள அள்ளக் குறையாமல் இருக்கிற பாத்திரத்தை, அட்சயப் பாத்திரம் என்று அழைத்தார்கள். ஆக, அட்சயம் என்றால் வளருதல். சயம் என்றால் கேடு என்று அர்த்தம். அட்சயம் என்பது, கேடு இல்லாத, அழிவு இல்லாத பொருள் என்று பொருள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். திருதியை என்பது மூன்றாம் நாள். அமாவாசையில் இருந்து வரும் மூன்றாம் நாள் திருதியை எனப்படுகிறது. சித்திரை மாதத்தின் அமாவாசையின் மூன்றாவது நாளே அட்சய திருதியை நாள் என்று போற்றப்படுகிறது. 🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊 🍏 #கடவுளை_வணங்குங்கள் 🍏 🍊 முதலில், அட்சய திருதியை நாளில் செய்யவேண்டியது வழிபாடு. இறைவனை வழிபட வழிபட, நாம் இன்னும் இன்னும் செம்மையாவோம். புத்தியில் தெளிவும் மனதில் திடமும் பேச்சில் இனிமையும் உடலில் வேகமும் பெறுவோம். இறைசக்தியின் நல்ல நல்ல அதிர்வுகள் யாவும் நமக்குள் வளர்ந்துகொண்டே இருக்கும். இது... அட்சய திருதியை எனும் நன்னாளின் மகத்துவம்! 🍊 இந்த நாளில், ஹோமம் செய்து பூஜிக்கலாம். ஜபங்கள் செய்து வணங்கலாம். பாராயணம் செய்து, கடவுளை ஆராதிக்கலாம். வீட்டில் தீபமேற்றி, சுவாமி படங்களுக்கு பூக்கள் அணிவித்து, பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல், கேசரி என இனிப்புகள் படைத்து, வேண்டிக் கொள்ளலாம். 🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊 🔥 தானம்.. தானம்...தானம்..! 🔥 🍊 அட்சய திருதியை நாளில், பொன்னும் பொருளும் வாங்க வேண்டும் என்கிறார்களே என்பது தான் பலரின் கேள்வி. உண்மையில் அந்தநாளில், அட்சய திருதியை நாளில், உப்பு வாங்குங்கள். உங்கள் வீட்டில் செல்வம் கடாக்ஷத்துடன் திகழும் என்பதை அடுத்தடுத்த காலகட்டத்தில் நீங்களே உணருவீர்கள். 🍊 அதேபோல் நாம் இந்தநாளில் செய்யவேண்டியது தானம். அட்சய திருதியை நாளில்., தானம் செய்யச் சொல்லி அறிவுறுத்துகிறது சாஸ்திரம். முடிந்தவர்கள், தங்கமோ வெள்ளியோ ஆச்சார்யர்களுக்கு தானமாக வழங்கி நமஸ்கரிக்கலாம். இன்னும் சொல்லப்போனால், ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு, நம்மால் முடிந்த தாலியோ தாலியில் கட்டிக்கொள்ளும் காசோ வழங்கலாம். 🍊 ’தங்கத்துக்கும் வெள்ளிக்கும் எங்கே போறது’ என்று அலுத்துக்கொள்கிற மிடில்கிளாஸ் அன்பர்கள், எவருக்கேனும் குறிப்பாக வயதானவர்களுக்கு குடை வாங்கிக் கொடுங்கள். இன்னொருவருக்கு செருப்பு வழங்குங்கள். வீட்டு வாசலில் ஒரு பானை வைத்து ஜில்லென குடிநீர் வழங்குங்கள். ‘அடிக்கிற வெயிலுக்கு ஒரு மோர் கொடுத்தா நல்லாருக்குமே’ என்று நினைத்தால், நீர்மோர் வழங்குங்கள், இனிப்பும் குளுமையும் தருகிற பானகம் வழங்குங்கள். 🍊 மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள்,பேனா, பென்சில், ஸ்கெட்ச் பேனா, டிராயிங் நோட்டு வழங்குங்கள். பெண்களுக்கு மஞ்சளும் குங்குமமும் மல்லிகைப்பூவும் வழங்குங்கள். முடிந்தால், ஜாக்கெட் பிட் வழங்கலாம். 🍊 சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு, பாய், போர்வை வழங்குங்கள். ஆடை வழங்குங்கள். ஒரு பத்து பேருக்காவது தயிர்சாதப் பொட்டலம் வழங்குங்கள். இவையெல்லாம் செய்யச் செய்ய, இந்த தானங்களை வழங்க வழங்க... உங்கள் வீட்டில் செல்வமும் வளமும், காசும் பணமும், தங்கமும் வெள்ளியும் பன்மடங்கு புண்ணியங்களாகச் சேரும் என்பது ஐதீகம்; நம்பிக்கை! 🍊 ஆகவே, அட்சய திருதியை நாளில், தானம் தான் செய்யவேண்டும். உங்களால் முடிந்த அளவுக்கு தானங்களைச் செய்யுங்கள். அந்த தானத்தின் தருமம்... உங்களின் ஏழேழு தலைமுறையையும் காக்கும் என்பது சத்தியம். 🙏🙏🙏 🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡 🔥#அக்ஷய_திரிதியை #என்றால்_என்ன?🔥 🍊 ஒரு சமயம் காசியில் நித்ய வாசம் செய்யும் அன்னபூர்னேஷ்வரி தேவி, தாம் தான் அன்ன தாதா என்று, சிறு கர்வம் கொண்டாள். 🍊 🌹அந்த எண்ணத்தை போக்குவதற்கு, சிவபெருமான் ஒரு சிவ யோகியாக தோற்றம் கொண்டு அன்னபூர்னேஷ்வரி மாளிகைக்கு வந்து, "தாயே பசி என்றார் ..🌹 🌹அதை செவிக்கொண்டு அன்னபூரணி தேவி, இலையிட்டு தன்னால் இயன்ற வஸ்துக்கள் அனைத்தையும் பரிமாறினார் 🌹 🌹சிவ யோகியோ, இன்னும் இன்னும் என்று அனைத்தையும் உட்கொண்டே இருந்தார்.🌹 🌹வஸ்துக்கள் அனைத்தும் பூர்த்தியாக, அன்னபூரணி தேவிக்கு, என்ன செய்வதென்று புரியவில்லை. 🌹 🌹உடனே, காசியில் பிந்து மாதவன் என்ற திருக்கோலத்தில் சேவை சாதிகின்ற, தன்னுடைய அண்ணனாகிய மஹா விஷ்ணுவிடம் பிரார்தித்து அழைத்தார்.🌹 🌹மஹா விஷ்ணுவாகிய பிந்து மாதவன், ஒரு அந்தணர் கோலத்தில் வந்தார். 🌹 🌹அன்னம் தயார் செய்யும் இடத்திற்கு சென்றால், அங்கு அன்னம் தயார் செய்த பாத்திரங்கள் அனைத்தும் சுத்தம் செய்து வைக்கபட்டிருந்தது. 🌹 🌹அன்னபூரணி தேவி நடந்த விஷயங்களை கூற, அதை கேட்ட மஹா விஷ்ணு, சுத்தம் செய்து வைக்கபட்டிருந்த பாத்திரத்தின் ஒரு ஓரத்தில் இருந்த பருக்கை அன்னத்தை, அக்ஷயம் என்று சொல்லிக்கொண்டு அவர்தம் தன் திருவாயால் உட்கொண்டார். 🌹 🌹உடனடியாக, சங்கல்ப மாத்திரத்தால் (பகவத் அனுக்ரகஹத்தால்) அன்ன வகைகள் அனைத்தும் தோன்றின. 🌹 🌹அன்னபூரணி தேவி அந்த சிவ யோகிக்கு அருகில் இலையிட்டு மஹா விஷ்ணுவை அமர்த்தினார்🌹. 🌹மஹா விஷ்ணுவோ, உட்கார்ந்த சிறிது நேரத்தில் திருப்தி என்று கூறி எழுந்து விட்டார்.🌹 🌹தமக்கு அருகில் உண்பவர் எழுந்து விட்டால் தாமும் எழ வேண்டும் என்ற முறையை பின்பற்றியாக வேண்டிய கட்டா யத்தினால், சிவ யோகியும் தமக்கு திருப்தி என்று எழுந்து விட்டார். 🌹 🌹அன்னபூரணி தேவி அந்த சிவ யோகியை வணங்க, சிவ யோகி சிவனாகவே காட்சியளித்தார். 🌹 "🌹உமைக்கு ஏற்பட்ட கர்வம் கொண்ட எண்ணத்தை மாற்றுவதற்கே தாம் இங்கு வந்தோம்", என கூறினார். 🌹 🌹உடனே, மஹா விஷ்ணு,"இன்றைய தினம் எவர் ஒருவர் நல்ல காரியங்களை தொடங்குகிறார்களோ, அது இனிதே வளரும்", என்று ஆசிர்வதித்தார். 🌹 🌹அன்று முதல் சித்தரை மாதம், சுக்ல பக்ஷ திரிதியை நாம் அக்ஷய திரிதியை திருநாளாக கொண்டாடுகின்றோம்....🌹 🌹எனவே அன்றைய தினம் பொருட்கள் மேலும் சேர பொருட்கள் வாங்குங்கள் .. 🌹 🌹ஆனால் புண்ணியம் மேலும் சேர நிறைய தானம் செய்யுங்கள் ....🌹 🌹மஹா விஷ்ணுவின் அருள் கிடைக்க பெருவீர்..🌹 🙏🙏🙏 என்று அன்புடன் குட்டி வேணுகோபால் திருச்செங்கோடு 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁