Fahmi
600 views
5 days ago
🌹🩷🌹🌹🩷🌹🌹🩷🌹🌹🩷🌹🌹🩷🌹🌹🩷🌹 *திருக்குர்ஆனில் ஆண்பாலான ஆயத்துகளே உள்ளன பெண்பாலான ஆயத்துக்கள் இல்லையே...என* #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் *நபியவர்களிடம் கேட்கப்பட்ட அழகானகேள்விக்கு...* *இறைவன்இறக்கிய இனியவசனம்..!* 🌹🩷🌹🌹🩷🌹🌹🩷🌹🌹🩷🌹🌹🩷🌹🌹🩷🌹 ஒருநாள் அகிலத்தின் பேரருள் *அண்ணல்நபி ஸல்லல்லாஹூ* அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்கள் கூடி உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தபோது... திருமறை குர்ஆன் ஷரீஃபில் எல்லா ஆயத்துக்களும் ஆண்களைக் குறித்தே சொல்லக் கூடியதாகவே இருக்கிறது. உதாரணமாக.. يا إيها الذين امنوا "ஈமான் கொண்டவர்களே!" என்று அல்லாஹ் கூறுகிறான். "இது ஆண் பெண் எல்லோரையும் குறிக்கிறது. மேலும் அரபி இலக்கணப்படி இது ஆண்பாலுக்குரியது.." "அல்லாஹ் பெண்களை மட்டும் குறித்து சொல்வதில்லையே ஏன்...?" "அல்லாஹ் ஆண்களைத் தான் அதிகமாக நேசிக்கிறானோ..?" மேலும் "நாம் செய்யும் வணக்கத்தை அல்லாஹ் ஏற்காமல் போய்விடுவானோ?" என்றகவலையில் பலவிதமான கருத்துக்களைப்பரிமாறி பேசிக்கொண்டனர். அன்றைய நாள் நபியவர்களுக்கு *அன்னைஉம்முசலமா* ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் வீட்டில் தங்கும்முறை *அண்ணல்நபி ஸல்லல்லாஹூ* அலைஹிவஸல்லம் அவர்களுக்கு உணவு பரிமாறும் போது *அன்னைஉம்முசலமா* ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் "யாரசூலல்லாஹ்! குர்ஆனில் அனைத்து ஆயத்துக்களும் ஆண்களைக் குறிக்கின்ற ஆண்பாலாகவே இருக்கிறதே.." "பெண்களை மட்டும் குறித்து வரக் கூடிய பிரத்தியேகமான வார்த்தைகள் இல்லையே ஏன்..?" என்று கேட்டதும் *"மாநபி ஸல்லல்லாஹூ* அலைஹி வஸல்லம் அவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தவர்களாக." "உம்முசலமா! நீ ஓர் அழகான கேள்வியைக் கேட்டு இருக்கிறாய்..!" "அல்லாஹ்வுடைய வேதம் சம்பந்தமாக நீ கேட்டதால் இதற்கு அல்லாஹ் தான் பதில் சொல்ல வேண்டும்." என சொன்னார்கள். அப்போது தான் அல்லாஹ் கீழ்கண்ட ஆயத்தை இறக்கினான்... اِنَّ الْمُسْلِمِیْنَ وَالْمُسْلِمٰتِ நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; وَالْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; وَالْقٰنِتِیْنَ وَالْقٰنِتٰتِ இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; وَالصّٰدِقِیْنَ وَالصّٰدِقٰتِ உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; وَالصّٰبِرِیْنَ وَالصّٰبِرٰتِ பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; وَالْخٰشِعِیْنَ وَالْخٰشِعٰتِ *(அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்;* وَالْمُتَصَدِّقِیْنَ وَالْمُتَصَدِّقٰتِ தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; وَالصَّآىِٕمِیْنَ وَالصّٰٓىِٕمٰتِ நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; وَالْحٰفِظِیْنَ فُرُوْجَهُمْ தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; وَالْحٰفِظٰتِ وَالذّٰكِرِیْنَ اللّٰهَ كَثِیْرًا وَّالذّٰكِرٰتِ ۙ *அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம்செய்யும் ஆண்களும்,பெண்களும்;* اَعَدَّ اللّٰهُ لَهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِیْمًا ۟ ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான் (அல்குர்ஆன் 33:35)