மெய் கிறிஸ்தவம் | Christianity Original
8.1K views
8 days ago
*#சின்னசின்னஆசை* 'நரகம்' ஒரிஜினல் பைபிளில் இல்லை. கல்லறை என்கிற எபிரேய 'ஷியோல்' வார்த்தையும், 'கெஹன்னா' என்ற கிரேக்க வார்த்தையும் 'நரகம்' என்று தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'கெஹன்னா' நரகம் என்றால் நாம் விமான டிக்கெட் எடுத்து அங்கே செல்ல முடியும்! ஆம், அது ஒரு நிஜ இடம். எருசலேம் மாநகரின் குப்பையெரிக்கும் பேட்டையின் பெயர்தான் கெஹன்னா. இயேசு, 'கெஹன்னாவில் எரியும் தீ' என்று சொல்வது ஒரு சென்னை நகரவாசி 'சைதாப்பேட்டையில் எரியும் தீ' என்று சொல்வதுபோல்தான்! இயேசுநாதர் நரகம் என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லை. இது மக்களை பயமுறுத்தி ஆள்வதற்கு இடைக்கால போப்பாண்டவர்கள் செய்த வஞ்சனை. *#மெய்கிறிஸ்தவம்பழகு* செத்தோர் யாவரும் "ஷியோல்" (கல்லறை) செல்வர். இயேசு ஆதாமிற்கு பதிலாக தன்னுயிரை கிரயமாக கொடுத்ததால், அவரது இராஜ்யம் வரும்போது ஆதாமின் வம்சம் (மனிதர் அனைவரும்!) உயிர்த்தெழுவர். ஆம், இழந்துபோன அன்பிற்குரியவர்களை அனைவரும் மீண்டும் சந்திப்பர்! *#இராஜ்யம்* இயேசுவும் அவரைப் பின்பற்றியோரும் செங்கோல் ஆட்சி செய்து, உயிர்த்தெழுந்த மனுக்குலத்திற்கு நீதி கற்றுக்கொடுப்பர். அப்போதும் கீழ்ப்படியாதார் (அக்கினி கடல் உவமை குறிக்கும்) "கெஹன்னா"வில் இரண்டாம் மரணம் அடைவர். #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #✝️இயேசுவே ஜீவன் #🎬 சினிமா #🙏ஆன்மீகம்