Sri Sudar
519 views
13 hours ago
இன்றைய திருக்குறள்  அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை. விளக்கம் : ஒருவனை காணாத இடத்தில் பழித்துப் பேசி காணும்போது பொய்யாக நகைத்துப் பேசுதல் என்பது அறநெறிச் செயல்களை அழித்து பாவங்களைச் செய்தலைவிட தீமையானது ஆகும். அதாவது ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது ஆகும். புறங்கூறுதல் கீழ்த்தரமான செயல். புறங்கூறப்பட்டவன் எதிரில் வரும்போது அவனிடம் பொய்யாக நகைத்துப் பேசுதல் அதனினும் கீழ்த்தரமான செயலாகும் என்கிறது குறள். சொல் பொருள் : அறனழீஇ - அறநெறிச் செயல்களை அழித்து புறனழீஇப் - ஒருவர் இல்லாத இடத்தில் அவரை பழித்துப் பேசுதல் பொய்த்து - நேரில் பார்க்கும் பொழுது பொய்யாக அல்லவை - பாவங்களை செய்தலின் - செய்தலைவிட தீதே - தீமையானது நகை - நகைத்துப் பேசுதல் மோனை : அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை. விளக்கம் : முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும். இது யாப்பிலக்கண வாய்ப்பாடு ஆகும். மோனை என்ற வார்த்தைக்கு முன்னிடம் என்பது பொருள். இக்குறளில் அறனழீஇ - அல்லவை ஆகியன மோனை ஆகும். எதுகை : அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை. விளக்கம் : இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை என்பது இலக்கண விதி ஆகும். இக்குறளில் அறனழீஇ - புறனழீஇப், செய்தலின் - பொய்த்து ஆகியன எதுகை ஆகும். #⚡ஷேர்சாட் அப்டேட்