novels
681 views
1 days ago
அம்பகத்தால் கொல்லாதடி! 𝟒𝟎 https://pratilipi.app.link/mudc6so9q3b "தேங்க்ஸ்.." என்றவனின் அழுத்த வார்த்தையில், அம்பகம் உருட்டிப் பார்த்தாள் புரியாமல். "எதுக்கு சார் தேங்க்ஸ் சொல்றீங்க.." "எல்லாத்துக்கும் தான்.." பூடகம் பேசும் கோமகனை, அப்போதும் புரியாமல் தான் நோக்கியது பூவிழிகள். "வாட்..?" "ப்ச் ஒண்ணுமில்ல, தூங்கிட்டாளா.." அவளை தாண்டி தங்கையை நோட்டமிட்டவன் கண்ணில், வருத்தம் தொய்ந்து கிடைப்பதை சிற்பி எப்படி உணர்ந்தாளோ! "ம்ம் தூங்கிட்டா.. ஏன் பேசணுமா உங்க தங்கச்சிகிட்ட.." அவன் முகத்தை உற்று பார்த்தாள். "பேச தான் வந்தேன், ஆனா இப்போ பாத்துட்டு போனா போதும்.." "ஏனாம் அப்டி.." "அதான் எனக்கு பதிலா நீங்க பேசிட்டீங்களே அம்மணி.. இதுக்கு மேல நான் பேச என்ன இருக்கு.." ஒருபக்க இதழ் சிரிக்கச் சொல்லி வைஷு அருகில் அமர்ந்துகொண்டவனை, வியப்பு கலந்த புன்னகையுடன் பார்த்து வைத்தாள் சிற்பி. #love #romance #song #status #💞Feel My Love💖