ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
632 views
12 hours ago
கான்பூர் பகுதி சேர்ந்தவர் மது குடிக்க பணம் இல்லாதால் வீட்டு சிலிண்டரை அடமானம் வைத்துள்ளார்.... அவரது மனைவி குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவர் இந்தச் செயலைச் செய்துள்ளார். மனைவி ஊரிலிருந்து திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் சிலிண்டர் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கணவரிடம் கேட்டபோது, அவர் மதுவிற்காகச் சிலிண்டரை அடகு வைத்ததை ஒப்புக்கொண்டார். இதனால் கணவன் – மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக உணவின்றி குழந்தைகள் பசியால் தவித்துள்ளனர். வேறு வழியின்றி அந்தப் பெண் தனது குழந்தைகளுடன் அவுரல் காவல் நிலையத்தின் கீழ் உள்ள மக்கன்பூர் புறக்காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். தனது கணவர் ஏற்கனவே இரண்டு முறை சிலிண்டர் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்று மது குடித்திருப்பதாகவும், இப்போது சிலிண்டர் இல்லாததால் இரண்டு நாட்களாகத் தனது பிள்ளைகள் உணவின்றிப் பட்டினியாக இருப்பதாகவும் கூறி அவர் கண்ணீர் வடித்தார். அந்தப் பெண்ணின் நிலையைக் கண்டு அங்கிருந்த காவல்துறையினர் மிகுந்த மனவேதனை அடைந்தனர். இதையடுத்து, மக்கன்பூர் புறக்காவல் நிலைய பொறுப்பாளர் விஷால் சர்மா, மனிதாபிமான அடிப்படையில் ஒரு அதிரடி முடிவை எடுத்தார். தனது சொந்தப் பணத்தைக் கொடுத்து அடகு வைக்கப்பட்ட சிலிண்டரை மீட்டு, அதில் கேஸ் நிரப்பி அந்தப் பெண்ணிடம் ஒப்படைத்தார். காவல்துறையினரின் இந்த எதிர்பாராத உதவியைக் கண்டு அந்தப் பெண் நெகிழ்ச்சியில் கண் கலங்கினார். “சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது மட்டுமல்ல, மக்களின் துயரத்தைத் துடைப்பதும் காவல்துறையின் கடமை” என நிரூபித்த அதிகாரியின் இந்தச் செயல் தற்போது சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது..... #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🗞️ ஏப்ரல் 10 ட்ரெண்டிங் நியூஸ் 📱