selva
515 views
5 hours ago
கருவாச்சி... அடி கருவாச்சி... உருவாச்சி உன் மேல காதல் உருவாச்சி! நாளாச்சு ரொம்ப நாளாச்சு விழி மூடி ரொம்ப நாளாச்சு! பகலும் புரியல... இரவும் விடியல... உன் முகம் மட்டும் என் விழியில் இன்னும் மறையல! என் உலகமும் சுழல மறுக்கின்றது உன் விழி பார்த்த நாளிலிருந்து! உன் சண்டைக்கார பார்வையால் பார்க்காதடி என் மனம் சல்லடையாய் போகுதடி! நீ போகும் ஒத்தையடி பாதையில உன்னை எண்ணி காத்திருக்கேன்... சிடுமூஞ்சிக்காரி என்னை சிதைச்சுட்டு போகாதே! அடை மழையில் நனைவது பிடிக்காது அறிந்தும் நனைகிறேன்... உன் முந்தானையில் தலை துடைப்பாய் என்கிற ஆசையில்! கண்டாங்கி சேலை கட்டி காட்டு வழி போறவளே கடைக்கண்ணால் நீ சிரிச்சா என் காதலும் வாழும்! ஊசி வெடிக்கே பயந்தவன் நானே உன் விரல் பிடித்ததால் உலகப்போர் நடத்த துணிகிறேன்! மண்வாசனை தருவதுண்டு மழைத்துளி உன் வாசனை என்னவென்று அறியவில்லை நானே! பூந்தோட்டத்தின் வாசமா? உன் புன்னகையின் வாசமா? கட்டி இழுக்கும் உன் காதல் வாசமா? உன் உடலில் வேர்த்து கொட்டும் வியர்வை துளிகளை சேகரித்து என் தாகம் பருகிக் கொண்டேன்! உன் வாசம் என்னவென்று தெரியாமல் வாசம் இல்லா பூவாய் நிக்கிறேன்! அடங்காத காளை போல திரிந்தவன் நானே உன் மீது காதலில் விழுந்து காணாமல் போனேனடி! கோவில் தீபம் போல் நீ ஜொலிக்க உன்னை வணங்கி நிற்கிறேன் உன் தீராத பக்தனாக என்றும் பாடுகிறேன் திருப்புகழ் போல உந்தன் பெயரே... விலகி விலகி நீ போனாலும் விட்டுவிட தோன்றலடி என் வீட்டுக்காறி நீ தானடி என் மனதுக்குளே வாழ்பவளும் நீ தானடி கருவாச்சியே என் கருவாச்சியே.... செல்வா ✍️ #💖love feel🌹 #💞Feel My Love💖 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #👌அருமையான ஸ்டேட்டஸ் #செல்வா கவிதை