B. CELLIN
1.6K views
1 days ago
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் காலை ஜெபம்* "ஆண்டவர் மாண்பு மிக்கவர்; நம் கடவுளின் நகரில், அவரது திருமலையில் மிகுந்த புகழுக்கு உரியவர். தொலை வடக்கில் திகழும் சீயோன் மலை அனைத்து உலகிற்கும் மகிழ்ச்சியாய் இலங்குகின்றது. மாவேந்தரின் நகரும் அதுவே. அதன் அரண்மனைகளில் கடவுள் வீற்றிருந்து, தம்மையே அதன் கோட்டை எனக் காட்டியுள்ளார். கடவுளே! உமது கோவிலின் நடுவில் உம் பேரன்பை நினைந்து உருகினோம். கடவுளே! உமது பெயரைப்போலவே, உமது புகழும் பூவுலகின் கடை எல்லை வரை எட்டுகின்றது; உமது வலக்கை நீதியை நிலைநாட்டுகின்றது". (திருப்பாடல் 48: 1-3. 9-10) எங்கள் அன்பிற்க்குரிய இயேசு கிறிஸ்துவே ! எங்கள் வழியும், உண்மையும், வாழ்வும் நீரே. ஏனெனில், உம் வழியாய் அன்றி, எவரும் தந்தையிடம் வருவதில்லை. இறைவா ! இந்தக் காலை வேளையில், என் மனக்கவலைகளை, என் பாரங்களை, என் கலக்கங்களை உம் பாதத்தில் வைக்கின்றேன். ஏனெனில் "நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளீர். தந்தையே! நிலையற்ற மனிதரிடத்தில் நான் நம்பிக்கை கொள்ளவில்லை. உம்மிடமே.. உம்மிடம் மட்டுமே நான் நிலையான நம்பிக்கை வைத்துள்ளேன். "பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்" என்ற பொன்விதியை எங்களுக்கு கொடுத்திருக்கிறீர். அப்பா ! உமது அந்த பொன்விதியின்படி, நான் என்றும் வாழ எனக்கு அருள் புரியும். இயேசு மரி! சூசை! என் இருதயத்தையும் ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். *ஆமென்.* விண்ணுலகில் இருக்கிற...(1) அருள் நிறைந்த...(3) பிதாவுக்கும், சுதனுக்கும்...(1) *ஆமென்.*