-
542 views
15 hours ago
#கோழைகள் உலகம் பயப்படும் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல.இங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்யாதீர்கள். செய்யும் செயலில் வெற்றியோ, தோல்வியோ எது வந்தாலும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கக் கூடாது. தொடர்ந்து உங்கள் பணியைச் செய்துக் கொண்டிருக்க வேண்டும். அதாவது வெற்றி வாய்ப்புகளுக்காக* காத்திருப்பதற்கும், தேடிச் செல்வதற்கும் வித்தியாசம் உண்டு என்பதை உணர்ந்து தம் திறமைகளை மேம்படுத்திக்கொண்டு வெற்றியைத் தேடிப் பெற்றுக்கொண்டவர்கள் தான் நிஜமான சாதனையாளர்கள். ஆகையால் முடிந்து போனதை கனவாக நினைத்துக் கொள்ளுங்கள். நடக்கப் போவதை வாழ்க்கையாக எடுத்துக் கொள்ளுங்கள் வாழ்க்கை சிறக்கும். இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.* கவலைகளை மறக்க இயற்கை தந்த வரமே தூக்கம், எனவே கவலையின்றி நிம்மதியாகத் தூங்குங்கள். "விடியும் நாளைய பொழுதும் நமக்கு நன்மை பயக்கும்.