sivasenthil
609 views
14 days ago
🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏பெரியபுராணம்🙏* *☀️திருமுறை1️⃣2️⃣☀️* *🌹திருநாவுக்கரசு நாயனார் புராணம்* *🦚பாடல்:1445///4272🦚* `மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா` ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *திருப்பாடல் :* 🌹நீண்டவரை வில்லியார் வெஞ்சூலை மடுத்தருளி நேரே முன்னாள் ஆண்டஅர செழுந்தருளக் கேட்டருளி ஆளுடைய பிள்ளை யாருங் காண்தகைய பெருவிருப்புக் கைம்மிக்க திருவுள்ளக் கருத்தி னோடு மூண்டஅருள் மனத்தன்பர் புடைசூழ எழுந்தருளி முன்னே வந்தார். ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *பொழிப்புரை :* *நீண்ட மேருமலையை வில்லாகக் கொண்ட சிவபெருமான் கொடிய சூலைநோயைத் தந்தருளி நேரே ஆண்டருளிய நாவுக்கரசர் வருகின்றார் என்ற செய்தியைக் கேட்டருளிய ஞானசம்பந்தரும், அவரைக் காண்டற்குப் பெருவிருப்பு மீதூர, அருள் கொண்ட மனமுடைய அடியார்கள் பலரும் சூழ்ந்து வர, எழுந்தருளி அவர் முன்னர் வந்தார்.* `எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!!` *🌹நடராஜா நடராஜா🌹* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🌼🌸சேக்கிழார்🌸🌼* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 #🙏ஆன்மீகம்