MMSkaruppusamy bavan
616 views
3 days ago
தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம் காக்க போராடி உயிர்த்தியாகம் செய்த திரு.குமார் பாண்டியன், திரு.செந்தில் பாண்டியன், திரு.சேகர் பாண்டியன், திரு.சுரேஷ் பாண்டியன் உள்ளிட்ட பராக்கிரமம் நிறைந்த பலிதானிகளை பெற்றுடுத்து இந்து சமுதாயத்திற்காக அர்ப்பணித்த அன்னையான திருமதி.அழகம்மாள் அம்மையார் அவர்கள் காலமானார் என்கிற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. தான் பெற்றெடுத்த நான்கு பிள்ளைகளையும் பாரத அன்னையின் பணிக்காக அர்ப்பணித்து அவர்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி தங்களையே பலிதானம் தந்த நிலையில் சொல்லொணாத் துயரங்களை நெஞ்சிலே சுமந்து வலிகளோடு வாழ்ந்து வந்த அந்த அன்னை இன்று இயற்கை எய்தினார் என்கிற செய்தி இந்து உணர்வாளர்கள் அனைவருக்கும் வேதனை அளிக்கிறது. அம்மையாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மையாரின் ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி #🙏கோவில்