Makkal Mugam
520 views
16 hours ago
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 எடப்பாடியார் முதலமைச்சரானால்தான் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை நிறுத்தப்படும் ஸ்ரீவை அதிமுக வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதன் பேச்சு தூத்துக்குடி ஏப்.18 - திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பண்டாரவிளையை சேர்ந்த அதிமுக வேட்பாளர் எஸ்.பி சண்முகநாதன் தொகுதி முழுவதும் தீவிரமாக இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து வருகிறார். இவர் சாத்தான்குளம் ஒன்றியம் பன்னம்பாறை பகுதி தேர்தல் பரப்புரையில் திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை போதை பழக்கத்தில் இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். இதனை தடுக்க அரசு தவறிவிட்டது. இதனால் தமிழ்நாட்டில் குற்ற சம்பவங்கள் ஆங்காங்கே அதிகரித்து வருகிறது.எடப்பாடியார் முதலமைச்சர் ஆவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். எடப்பாடியார் முதல் அமைச்சரானால் தான் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்குநிலை நிறுத்தப்படும். இத்தேர்தலில் எதிரிகளை வீழ்த்தி அதிமுக கூட்டணி கட்சிகள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவது உறுதி. அதிமுக அறிவித்த தேர்தல் அறிக்கை சிறப்பான அறிக்கையாகும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000/- வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். அனைத்து ரேஷன் அட்டை குடும்பத்தார் களுக்கும் குளிர்சாதன பெட்டி இலவசமாக வழங்கப்படும். மாணவர்களின் கல்வி கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு 7.5% லிருந்து 10.5% வரை உயர்த்தி வழங்கப்படும். ஜெ வளர்த்த அதிமுக கட்சி மக்களுக்கான கட்சியாகும்.நான் 24 மணி நேரமும் இந்த தொகுதியில் தான் இருப்பேன். நான் உங்களுடன் ஒருவராக இருந்து உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன். எனவே நீங்கள் 23.4.2026 அன்று வாக்களிக்க வேண்டிய சின்னம் இரட்டை இலை சின்னம் என்பதை மறந்துவிடாதீர். நீங்கள் எனக்கு வாக்களித்து வெற்றிபெற செய்தால் தான் உங்கள் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியும் எனவே மறவாமல் இரட்டை இலைக்கு அதிக வாக்குகள் அளித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என பேசினார். நிகழ்வில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள், மகளிரணியினர், மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.