#✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 இரக்கத்தின் ஆண்டவரை நோக்கி செபம் ✝️*
மிகவும் புனித தம திருத்துவமே! என் சுவாசத்தைப் போலவும் , என் இதயத் துடிப்பைப் போலவும், அத்தனை ஆயிரம் முறை உம்மை மகிமைப் படுத்த விழைகிறேன்.
வாழ்கின்ற உமது பிரதிபலிப்பாக, உமது இரக்கத்தில் என்னை உருமாற்ற விழைகின்றேன். உமது பல தெய்வீக வெளிப்பாடுகளில், மிகச்சிறந்த உம் கரையில்லா கருணையிரக்கம் என் இதயத்திலும், பிறர் உள்ளத்திலும் பரவட்டும்.
ஆண்டவரே! என் கண்களில் உம் இரக்கம் மிளிரட்டும். இதனால் பிறரின் தோற்றத்தைக் கண்டு அவர்களை சந்தேகப்படவோ, தீர்ப்பிடவோ செய்யாமல், என் அயலாரின் அழகிய ஆன்மாவைக் காணவும், அவர்களின் அபயத்துக்கு உதவவும் செய்தருளும்.
ஆண்டவரே, என் காதுகளில் உம் இரக்கம் மிளிரட்டும். இதனால் பிறரின் தேவைகளை உணரவும், அவர்களின் வலியிலும், வேதனையிலும் நான் அவர்களை அலட்சியம் செய்யாதிருக்கச் செய்தருளும்.
ஆண்டவரே! என் நாவில் உம் இரக்கம் மிளிரட்டும். இதனால் நான் பிறரைப் பற்றி எதிர் மறையில் பேசாமலும் , பிறருக்கு ஆதரவாகவும், மன்னிக்கவும் செய்தருளும்.
ஆண்டவரே, என் கைகள் இரக்கமும் , நற்செயல்கள் நிறைந்ததாகவும் மிளிரட்டும். இதனால் நான் பிறருக்கு நல்லதையே செய்யவும், என் மேல் கடினமான, கசப்பான வேலைகளை ஏற்றுக்கொள்ளவும் செய்யும்.
ஆண்டவரே, என் கவலைகள் உம் இரக்கத்தை வெளிப்படுத்தச் செய்தருளும். இதனால் என் அயலாரின் அவசரத் தேவைக்கு உதவவும், என் களைப்பையும் சோர்வையும் கருதாமல், உடன் விரைந்திடவும், என் உண்மையான ஓய்வு, பிறரின் சேவையில் தான் என்பதை உணரச்செய்யும்.
ஆண்டவரே! என் இதயம் இரக்கமுள்ளதாகச் செய்தருளும். இதனால், என் அயலாரின் வேதனைகளை உணரச் செய்தருளும். யாருக்கும் என் இரக்கத்தை மறுக்காமல் இருக்கச் செய்தருளும். என் இரக்கத்தை தவறாகப் பயன்படுத்துபவருக்கும், நேர்மையாக நடக்கச் செய்தருளும். என்னையே உம் இரக்கம் மிகுந்த இதயத்துக்குள் பூட்டியருளும். என் துன்பத்தை மௌனமாக தாங்கச் செய்தருளும் உம் இரக்கம் என் மேல் தங்கச் செய்யும்.
மூன்று படிகளில், உமது இரக்கத்தை பயிற்சி செய்ய உதவியருளும்.
இரக்கத்தின் செயல் பாடுகளிலும்,
இரக்க மிக்க வார்த்தைகளினாலும்,
இவைகள் முடியாதபோது என் ஜெபத்தாலும்,
பிறருக்கு உதவச் செய்தருளும்.
என் சொல், செயல் போக முடியாத இடத்துக்கு, என் செபம் செல்லும் என்பதினால்,
ஓ! இயேசுவே, என்னை உம்மைப் போல் உருவாக்கும். ஏனெனில், உம்மால் எதுவும் செய்ய முடியும். ஆமென்.