Makkal Mugam
471 views
1 days ago
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 *77 ஆண்டு அரசியலுக்கு முதுகுளத்தூரில் முற்றுப்புள்ளி? ராம்குமாருக்காக களமிறங்கும் சசிகலா* முதுகுளத்தூர் ஏப் 12, இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் டாக்டர் ராம்குமார் அவர்கள், ஏர்வாடி, முத்தரையர் நகர், எம்.கே. வலசை, சேரந்தை, கிருஷ்ணாபுரம், தனிச்சியம், கொத்தங்குளம், ஆய்க்குடி, குசவன்குளம், திருவரங்கை, பாப்பாகுளம், கீழக்கிடாரம், சாயல்குடி உள்ளிட்ட கிராமங்களில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மக்களிடம் நேரடியாக சென்று ஆதரவு கோரிய அவர், குறிப்பாக சாயல்குடியில் இஸ்லாமியர்களை நேரில் சந்தித்து, அங்குள்ள பள்ளிவாசலுக்கு சென்று மக்களின் குறைகள் மற்றும் தேவைகளை நேரில் கேட்டறிந்தார். இதன் மூலம் அனைத்து தரப்பினரிடமும் இணைந்து செயல்படும் வேட்பாளராக அவர் கவனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து, சாயல்குடி பேருந்து நிலையம் அருகில் உள்ள கர்மவீரர் காமராஜர் சிலைக்கும், சுதந்திரப் போராட்ட தியாகியும் ஆன்மீகவாதியுமான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு திரண்டிருந்த பொதுமக்களை நேரில் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிலையில், டாக்டர் ராம்குமார் அவர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா அவர்கள் ஏப்ரல் 13 ஆம் தேதி முதுகுளத்தூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில், அவர் நேரடியாக பொதுமக்களிடம் உரையாற்றி ஆதரவை திரட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுகுளத்தூர் தொகுதியில் தீவிரமாக நடைபெற்று வரும் தேர்தல் சூழலில், இந்த கூட்டம் முக்கிய திருப்புமுனையாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் பெருமளவில் திரளவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த பிரசாரம் மூலம் டாக்டர் ராம்குமார் அவர்களின் வெற்றிக்கான மக்கள் ஆதரவு மேலும் வலுப்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், 77 ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகளின் அரசியலை முதுகுளத்தூர் தொகுதியில் முடிவுக்கு கொண்டு வரக்கூடிய மாற்ற வேட்பாளராக, அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் டாக்டர் ராம்குமார் திகழ்கிறார் என அவரது ஆதரவாளர்களும் அரசியல் பார்வையாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.