மெய் கிறிஸ்தவம் | Christianity Original
829 views
6 days ago
*#பரியாசக்காரர்* இயேசு தான் எல்லா மனிதரையும் சாவிலிருந்து மீட்டு உயிரோடு எழுப்புவேன் என்று அறிவித்த பொழுது *பெரும்பாலான மக்கள் அதனை நம்ப மறுத்தனர். இன்றும் கூட அதே நிலைமை தான்.* மனிதர் எல்லாரும் உயிரோடு எழுந்தால் நிறைய பிரச்சனைகளும், கடினமான சூழ்நிலைகளும் வரும் என்று காண்பிக்க அம்மக்கள் பலவித கேள்விகளை எழுப்பினர். இன்றும் கூட எழுப்புகிறார்கள். ஆனால், வேதாகமம் சொல்வது போல, தேவன் மனிதனின் மனதில் நித்தியத்தை வைத்துள்ளார் (பிரசங்கி3:11). நாம் *எல்லாரும் மனதில் ஏதோ ஒரு மூலையிலாவது நித்தியமாக வாழும் ஆசை கொண்டுதான் இருக்கிறோம். அதைவிட நமது அன்பிற்குரியவர்களுக்கு அது நடக்க வேண்டும் என்று நாம் நிச்சயம் ஏங்குகிறோம்.* அது எப்படி சாத்தியப்படும், அதனால் எழும் எல்லா சூழ்நிலைகளும் எப்படி சரிப்படுத்தப்படும் என்று நமது சிறு மூளைகளுக்கு எட்டாவிட்டாலும் (மத்தேயு22:23-33, அப்போஸ்தலர்17:32), நாம் அதற்காக ஏங்கத்தான் செய்கிறோம். அப்போஸ்தலர் பவுல் நமக்கு சொல்கிறார், "மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்? அப்படியென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா. #மீட்பு ஓர் மனுஷனால் (ஆதாமினால்) மரணம் உண்டானபடியால், ஓர் மனுஷனால் (கிறிஸ்துவினால்) மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. #வருங்காலம் எல்லாரும் ஆதாமினால் மரிக்கிறதுபோல, எல்லாரும் கிறிஸ்துவினால் உயிர்ப்பிக்கப்படுவார்கள்." 1கொரிந்தியர்15:12-22. #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #✝️இயேசுவே ஜீவன் #🎬 சினிமா #🙏ஆன்மீகம்