#😢பாரதிராஜாவின் இறுதி சடங்கு🙏 இப்படி chase பண்ணி அஞ்சலி செலுத்துவேன்னு நினைக்கவே இல்ல…
மாலை வரையிலும் அவரது சென்னை இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்த இயலாத நிலையில் ,,,,
இனியும்
அவரை நேரில் பார்த்து விடை கொடுக்க முடியாது என்பதை மனம் ஏற்கவில்லை. 😔
சட்டென்று நள்ளிரவில்
நண்பர்களுடன் காரில் புறப்பட்டு, தேனி நோக்கிச் சென்று கொண்டிருந்த அவரது இறுதி ஊர்வல வாகனத்தை பின்தொடர்ந்து சென்றோம்.
ஒரு ரசிகனாக…
அவரை கடைசியாக ஒருமுறை பார்த்து நன்றி சொல்ல வேண்டும் என்று மட்டும் தோன்றியது.
மண்ணின் மணத்தையும், மனிதர்களின் உணர்வுகளையும் உலகிற்கு எடுத்துச் சென்ற மகத்தான படைப்பாளிக்கு மனமார்ந்த அஞ்சலி. 🙏🕊️
நன்றி பாரதிராஜா ஐயா…
உங்கள் படைப்புகள் என்றும் வாழும்,,