அமாவாசைக்கு அடுத்த திதி பிரதமை. அதற்கு அடுத்த திதி துவிதியை. அமாவாசையை அடுத்து வரும் துவிதியை இரவு நேரத்தில் இருக்குமானால், அந்த நாளை சந்திர தரிசன நாளாக ஜோதிடர்கள் பஞ்சாங்கத்தில் குறிப்பார்கள்.
காலண்டர்களிலும் சந்திர தரிசனம் என குறிப்பிடப்பட்டிருக்கும்.
இதை மூன்றாம் பிறை என்றும் சொல்வர்.
மூன்றாம் பிறை தரிசனம் பலவகையிலும் மனிதர்களுக்கு நன்மையை அளிக்கும். சிலருக்கு ஜாதகத்தில் ஆயுள் தோஷம் இருக்கும். சிலருக்கு தீராத நோய் இருக்கும். அவர்களுக்கு சந்திர தரிசனம் மிகச் சிறந்த பரிகாரம்.
சந்திர தரிசனத்தன்று ( இன்று ) மாலையில் சூரியன் மறைந்த பிறகு இரவு 7.30 மணிக்குள் வானில் தெரியும் பிறைச்சந்திரனை தரிசித்து விட வேண்டும்.
சந்திர தரிசனம் சனிக்கிழமைகளில் வருவது மிகவும் சிறப்பானது. அதிலும் சித்திரை மாதத்தில் வரும் சனிக்கிழமையில் சந்திர தரிசனம் செய்வது ஒரு ஆண்டு மூன்றாம் பிறையை பார்த்த பலனை தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
மன பலத்தை தருபவர் சந்திரன். மனபலம் இருந்துவிட்டால் நோய்கள் அணுகாது, எந்தவித பயமும் இருக்காது, செயல்களில் தடங்கல் இருக்காது.
எனவே மனபலம் பெற்று வாழ்வை தைரியத்துடன் நடத்த இன்றைய தினம் சந்திர தரிசனம் செய்வோம்.
அவ்வாறு தரிசிக்கும் போது,
__எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி ..._
_திருவருள் தருவாய் சந்திரா போற்றி ..._
_சத்குரு போற்றி. சங்கடந் தீர்க்கும். சதுரா போற்றி._
#god