சரவணகுமார்©183
539 views
1 days ago
#ஆதவ்_சார் #ஆக்சன்_எப்போது? இந்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு, கடந்த மே மாதம் 26 ஆம் தேதி தமிழ் நாட்டின் இரு இடங்களில் வைத்து போதைப் பொருள் கடத்தல் கும்பலை கைது செய்துள்ளது. அந்த நபர்கள் பிரதாப், ஜாசன், ராஷிம், ரமிஷ்டன் ஆகிய இலங்கையை சேர்ந்த நால்வர் ஆவர். இவர்களை சென்னை மற்றும் இராமநாதபுரம் பகுதிகளில் கைது செய்துள்ளனர். இவர்களை விசாரித்த பொழுது, இவர்கள் தங்கள் தலைவன் இவர்தான் எனக் கூறிய பெயர் ஜான் பிரிட்டோ. யார் இந்த ஜான் பிரிட்டோ?! முதலமைச்சருக்கு அடுத்த நிலை அமைச்சராக இருக்கும் ஆதவ் அர்ஜுனாவின் மிக நெருங்கிய உறவினர். அதாவது அவர் மனைவி டெய்சி ஆதவின் தாய் மாமா. அதாவது அதிமுக லால்குடி தொகுதி எம் எல் ஏ லீமா ரோஸின் தம்பி. லாட்டரி மார்டினின் மைத்துனர். இவர் மீது பிஎம்எல்ஏ, அதாவது ஹவாலா வழக்கும் மற்றும் போதைப் பொருள் கடத்தல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹசீஷ் எனும் ப்ரவுன் சுகர் மற்றும் ஐசி இ என அறியப்படும் மெத்தம்ஃப்டமைன் ஆகிய போதைப் பொருள்களை சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மாஃபியாக்களின் தொடர்போடு கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது! தவெக ஆட்சிக்கு வந்தவுடன் போதைப் பொருள் கடத்தியவர் கண்டுபிடிக்கப்பட்டால் அவரின் சொத்து மட்டும் அல்லாது, அவரின் உறவினர்கள் சொத்தும் பறிமுதல் செய்யப்படும் எனக் கூறியிருந்தது. அதன் அடிப்படையில், ஜான் பிரிட்டோவின் மச்சான் லாட்டரி மார்டினின் சொத்துக்கள், அக்கா அதிமுக எம் எல் ஏ லீமா ரோசின் சொத்துக்கள், மருமகள் டெய்சி ஆதவின் சொத்துக்கள், டெய்சியின் கணவரும் தவெக அமைச்சருமான ஆதவ் அர்ஜுனாவின் சொத்துக்கள், கட்சி பதவிகள் மற்றும் அமைச்சர் பதவி ஆகியவற்றை தவெக கூட்டணி அரசு கைப்பற்ற வேண்டும். போதைப் பொருள் மலிந்து கிடக்கிறது, எங்கு திரும்பினாலும் கஞ்சா அபின் எனக் கூச்சல் போட்ட தவெக தலைவர் விஜயும், அடுத்த கட்ட தலைவர் ஆதவ் அர்ஜுனாவும்.... போதைப் பொருளை தமிழ் நாடு முழுவதும் வினியோகம் செய்த அயோக்கியத் தனத்தை அவர்களின் ஆள் தான் செய்தான் என வெட்ட வெளிச்சமாகத் தெரிந்துவிட்ட நிலையில் என்ன செய்யப் போகிறார்கள்? குற்றவாளியின் குடும்ப உறுப்பினர் செல்வாக்கு மிகுந்த அமைச்சர் பதவியில் இருந்தால் எப்படி, குற்றங்கள் கண்டு பிடிக்கப்படும்? விசாரணை தான் முறையாக எப்படி நடைபெறும்? இதை வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் மிகப் பெரிய அளவில் ஒரு போராட்டமாக முன்னெடுத்து ஆளும் அரசின் அமைச்சர் குடும்பத்தினரின் அயோக்கியத் தனத்தை வெளிக் கொண்டு வர வேண்டும். இதை எளிதாகக் கடந்து சென்று விடக் கூடாது. எல்லோருக்கும் இது ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்!💥 சு. செல்வநாயகம் வழக்குரைஞர். #@அமானுஷ்யம்@( HORROR ) #தமிழ்நாடு அரசியல் #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #😅 தமிழ் மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️