🤔 'என்னைப் பார்த்து என் மனைவி உடம்பு சுகத்துக்காக என்னை வச்சிருக்கீங்களா' என்று கேட்கிறார். இதற்கு என்ன பதில் சொல்வது? 😟
👨 கணவன்: ஓய்.. இங்க பாரு, கொஞ்சம் திரும்பி படு..
👩 மனைவி: அதெல்லாம் முடியாது, எனக்கு தூக்கம் வருது 😴
👨 கணவன்: இப்போ நான் உண்ட என்ன கேட்டேன் அப்டி, கொஞ்சம் திரும்பி பாரு, உண்ட பேசணும் 🗣️
👩 மனைவி: அதுக்கு..இப்போ தான் நேரம் கெடச்சாதா.. பேசாம தூங்குறிங்களா இல்லையா.. 😤
👨 கணவன்: வேற எப்போ தான் டி உண்ட பேசுறது, நான் இப்போ தான வந்தேன். 🕒
👩 மனைவி: மணி மூணு, எனக்கு வேற வேலையே இல்லையா, உங்களையே பாத்துட்ருந்தா போதுமா.. 😠
👨 கணவன்: இல்லடி கொஞ்சம் திரும்பி தான் பாரேன். 🙏
👩 மனைவி: நீங்க எதுக்கு கேக்குரிங்க எனக்கு தெரியும், நான் ஒன்னும் மெஷின் இல்ல, சரியா.. இப்போ தூங்குறிங்களா இல்லையா. 😡
👨 கணவன்: என்னடி இப்படி பேசுற, உனக்கு என்னதான் அப்டி பிரச்சனை. 😔
👩 மனைவி: எப்புடிங்க இப்படி வாய் கூசாம கேக்க முடியுது, அப்டி என்ன பண்ணிட்டிங்க பெருசா. வரிங்க, சாப்புடரிங்க, தூங்குறிங்க. வேற.. எண்ட உக்காந்து நல்லா சிரிச்சு பேசி எவ்ளோ நாள் ஆச்சு தெரியுமா.. உங்கட்ட நான் என்ன கேட்டேன், நகை.. ட்ரெஸ் இதுல ஒன்னாவது நானா கேற்றுப்பேனா.. சொல்லுங்க.. எல்லார மாதிரியும் வெளிய கூட்டிட்டு போங்கன்னு அடம் புடிச்சனா.. சென்னை வந்து 2 வருஷத்துல எவ்ளோ வாட்டி பீச் போயிருக்கோம் சொல்லுங்க.. நீங்க இப்பெல்லாம் குழந்தைய கூட கொஞ்சுறது இல்ல.. தினமும் நீங்க தூங்குறத தான் அவனும் பாக்குறான்.. அப்பறம் எப்டி அப்பா னு பாசம் வரும்.. இதுல நடு ராத்திரி வந்துட்டு இது ஒரு கேடு.. நானும் மனுஷி தான் புரிஞ்சுக்கோங்க.. 😭💔
🤐 சத்தியமாக அவனிடம் இதற்கு விடை இல்லை..
👨 கணவன்: சரி தூங்கு 😔
👩 மனைவி: என்ன இப்படி சொல்றிங்க. நாயா நான் கத்திற்றுக்கேன்.. 😢
👨 கணவன்: இப்போ என்ன தாண்டி என்ன பண்ண சொல்ற, நானும் மனுஷன் தான், மெஷின் இல்ல.. எனக்கும் உணர்ச்சி எல்லாம் இருக்கு. நான் என்ன ஊரா சுத்திட்டு வரேன்.. என் வேலை அப்டி.. மதியம் போயிட்டு இப்படி 3 ,4 மணிக்கு தான் வர முடியும்.. இப்படி லேட்டா வந்தா காலைல தூக்கம் வராம என்ன பண்ணுமாம். உங்க வீட்ல எல்லாம் இப்படி யாரும் நைட் ஷிப்ட் போனது இல்லைல உனக்கு எப்புடி என் கஷ்டம் புரியும். நான் என்ன அப்புடி பெருசா தப்பு பண்ணிட்டேன் சொல்லு.. பைக் வேணாம், பையன வச்சுட்டு போக முடியலைன்ன.. லோன் போட்டு கார் வாங்குனேன்.. வாடகை வீட்ல இருந்தா உங்க வீட்ல மதிக்க மாட்டாங்கன்ன, சரி , இருந்த காச முதலா போட்டு emi ல இந்த பிளாட் வாங்கியாச்சு. அதுக்குள்ள குழந்தை .. உனக்கு ஆஸ்பத்திரி செலவு, சரி பண்ணியாச்சு.. அடுத்து அவனுக்கு பாக்கணும்.. 3 மாசத்துக்கு ஒரு வாட்டி vaccine வேற.. நான் ஒன்னும் சொந்த மொதல் போட்டு பிசினஸ் பண்ணல தாயே.. மாச சம்பளம் தான்.. ஒரு மாசம் லோன் emi கு மட்டும் எவளோ போகுதுன்னு தெரியுமா.. என்னைக்காவது கேற்றுக்கியா.. இல்ல என்ன பண்ண போறீங்க ன்னு ஏதும் டிஸ்கஸ் பண்ணியா.. ஒன்னும் இல்ல.. நானும் நீ கஷ்டப்படுவேன்னு ஏதும் சொல்றது இல்ல.. நான் IT ல இருக்கேன் எப்போ வேல போகும்னே தெரியாது.. போக சொன்னா வர வேண்டி தான். ஒரு மாசம் என் சம்பளம் இல்லைனா என்ன ஆகும் தெரியுமா.. உங்க வீட்ல ஏதும் குடுத்து உதவ போராய்ங்களா.. நான் தான பாக்கணும். 😔💸
😥 எனக்கும் இதையெல்லாம் மறந்துட்டு உன் கூட இருக்கணும், வெளிய போகணும்னு எவளோ ஆசை தெரியுமா. நான் ரெம்ப ஆசைப்பட்டு ரசிச்சு லவ் பண்ணி , வீட்ட எதுத்துகிட்டு கல்யாணம் பண்ண பொண்ணு நீ.. எனக்கும் ஆசை இருக்காதா சொல்லு. நம்ம சூழ்நிலை அப்டி இருக்கு, யாரும் விருப்பப்பட்டு வேலையே கெதின்னு இருக்குறது இல்ல டி.. நம்ம பையனோட future கும் சேர்த்து வைக்கணும், நல்லா படிக்க வைக்கணும், ஒரு நல்ல அப்பாவா இருக்கணும்னு எவளோ கஷ்டப்படறேன் தெரியுமா.. என்னால இந்த வயசுல தான் டி கஷ்டப்பட முடியும்.. நாற்பதை தாண்டிருச்சுனா அவளோ தான்.. இதையும் தாண்டி நான் என்ன பண்ணனும் சொல்லு.. 😓
🤐 இப்போது அவளிடம் விடை இல்லை..
🤷 இதில் யாரை தப்பு சொல்வது, யார் மீது குற்றம் சுமத்துவது. ❓
📚 நம் சமூகத்தில் எவ்வளவோ விடயங்கள் குழந்தை பருவத்திலிருந்தே நமக்கு யார் மூலமாவது கற்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
💑 ஆனால் தாம்பத்யம், குடும்ப வாழ்க்கை.. இவை மட்டும் என்ன தீண்டத்தகாதவையா.. 🩸 உனக்கு வந்தா ரத்தம், 🍅 எனக்கு வந்தா தக்காளி சட்னியா 😏
💍 கல்யாணத்திற்கு பிறகு ஒவ்வொருவரும் தாம்பத்தியம் என்ற கிணற்றில் தள்ளி விடப்பட்டு அவர்களாகவே நீச்சல் கற்றுகொள்கிறார்க்கிறார்கள்.. 🏊♂️ இதில் கரை சேர்வோரும் உண்டு, 😫 மூச்சு முட்டி மூழ்குவோரும் உண்டு..
👨👩👧 ஒவ்வொரு குழந்தைக்கும் குடும்ப அறிவை ஊட்டுவது ஒவ்வொரு பெற்றோரின் பொறுப்பு.. 🙏
👨🏫 தயவு செய்து நம் 12வது வகுப்பு விலங்கியல் ஆசிரியர்களை போல தட்டிக்கழித்து விடாதீர்கள். ❌
💝 எப்போது ஒரு குடும்பத்தில் வாங்குவதை போல கொடுப்பதும் , தனக்கானவர்களுக்காக இழப்பதும் இன்பம் என்பதை கணவன் மனைவி இருவரும் உணர்ந்து கொள்கின்றனரோ..
🏡 அதுவே இல்லம்..இல்லையேல் வெறும் செங்கல் கொண்டு கட்டப்பட்ட வீடு.. 🧱
#😇Take care Quotes📜