🌹*இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.*
16.04.2026 *(வியாழன்)*
*ஒளி நிறை மறையுண்மைகள்.*
*1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,*
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில், *"“மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிடக் கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்?"* என திருத்தூதர்கள் கூறுவதை வாசிக்கின்றோம்.
வாழ்வில் எல்லா சூழ்நிலைகளிலும் நாம் மனிதரைவிட கடவுளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,*
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய திருப்பலிக்கு முன் வாழ்த்தொலியில், *"தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்.!* என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
விசுவாசத்தில் நாம் என்றும் நிலைத்து நின்று பேறு பெற்றவர்களாக விளங்கிட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,*
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில், *"மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர். நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார். மாறாகக் கடவுளின் சினம் அவர்கள்மேல் வந்து சேரும்."* என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
நாம் இயேசுவிடம் முழுமையாக நம்பிக்கைக் கொண்டு நிலைவாழ்வை பெற வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,*
உயிர்த்த கிறிஸ்து நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒளியேற்ற, நம்பிக்கையை ஊட்ட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,*
குழந்தை இயேசுவுக்கும், புனித யூதா ததேயுவிற்கும் ஒப்புக் கொடுக்கப்பட்ட வியாழக்கிழமையான இன்று நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டுக் குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*ஆமென்.*🙏
#✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #சகாய மாதா #வேளாங்கண்ணி மாதா #அன்னை மரியே வாழ்க💒💐