#✝பிரார்த்தனை #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 காலை ஜெபம்*
"அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப் பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்".
(திருப்பாடல் 100 :1-5)
எங்கள் வாழ்வு தரும் ஊற்றே! உம் பேரின்ப ஓடையில், எங்கள் தாகம் தணிப்பவரே! எங்கள் மீட்பின் பிறப்பிடமே! இந்த காலை வேளையில், உம்மை வாழ்த்திப் போற்றி ஆராதிக்கின்றோம்.
இறைவா! இன்றுவரை என்னை உம் சிறகுகளில் அரவணைத்து, பாதுகாத்து வரும் உம் மேலான அன்பிற்காக நன்றி அப்பா.
மீட்பின் தேவனே! உமது இரண்டாவது வருகையை மறந்து, அதை எதிர்நோக்காது, அதற்காக என்னையே நான் தயார்படுத்திக் கொள்ளாமல், கடந்த காலங்களில் நான் அறிவிலியாக இருந்ததற்காக உம்மிடம் மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறேன். மன்னிக்கும் தேவனே! மனமிரங்கி என்னை மன்னித்தருளும்.
உமது வருகையை, தினம் தினம் ஆவலோடு எதிர்கொள்ளும் வகையில் அதற்கு ஏற்றபடி, முன்மதியுள்ள பெண்டிரின் மனநிலையை எனக்குத் தந்தருளும்.
இரக்கத்தின் இறைவா! செம்மறியின் விருந்திற்கு அழைக்கப்படும் மாபெரும் பேற்றினை எனக்கும் அளித்தருளும்.
இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
*ஆமென்.*
விண்ணுலகில் இருக்கிற ...(1)
அருள் நிறைந்த....(3)
பிதாவுக்கும், சுதனுக்கும்...(1)
*ஆமென்.*