gurumadasamy
1.1K views
3 days ago
#🙏கோவில் #🙏ஆன்மீகம் புஷ்ப பூஜை: இந்தப் பாடலைப் பாடினால் சிவனுக்கு 14 வகைப் பூக்களைச் சமர்ப்பித்த பலன் உண்டு புண்ணியம் செய்வாருக்குப் பூவுண்டு நீருண்டு, அண்ணல் அதுகண்டு அருள்புரியா நிற்கும்’ என்கிறது திருமந்திரம். பூக்களை ஆய்ந்துத் தூய்மைப்படுத்தி, தண்ணீரில் நனைத்த பிறகே இறைவனுக்குச் சூட்ட வேண்டும். பன்னீரில் நனைத்துப் பூஜிப்பது விசேஷம்! இறைவன் பெயருடன் போற்றி என்பதைச் சேர்த்துச் சொல்லி மலரிட்டு வழிபட வேண்டும். சிவபெருமானுக்கு வாரத்தில் ஏழு நாள்களும் என்னென்ன பூக்கள் சமர்ப்பிக்கலாம் என்று துதிநூல்கள் விவரிக்கின்றன. அந்த வகையில் ஞாயிற்றுக் கிழமை தாமரை; திங்களன்று வெள்ளாம்பல்; செவ்வாய் செங்கழுநீர்ப் பூக்கள்; புதனன்று கயலாந்தங்கரை எனும் பூக்கள்; வியாழனன்று குவளை மலர்கள்; வெள்ளிக்கிழமையில் வெண் தாமரை; சனிக் கிழமையில் நீலோற்பலம் ஆகியவற்றைச் சமர்ப்பிக்கலாம். அதேபோல், ஒவ்வொரு மாதமும் வரும் பெளர்ணமி தினத்தில் அந்தந்த மாதத்துக்கு உரிய மலர்களைச் சமர்ப்பித்து இறைவனை வழிபடுவதால் விசேஷ பலன்கள் கிடைக்கும். சித்திரை - முருக்கன் பூ, வைகாசி - புன்னை, ஆனி - வெள்ளெருக்கு, ஆடி - அலரி, ஆவணி - செண்பகம், புரட்டாசி - கொன்றை, ஐப்பசி - தும்பை, கார்த்திகை - கத்தரி, மார்கழி - பட்டி, தை - தாமரை, மாசி - நீலோற்பலம், பங்குனி - மல்லிகை. சிவபூஜையில் குறிப்பிட்ட பூக்களை- இலை களைச் சமர்ப்பிப்பதால் குறிப்பிட்ட பலன்கள் கிடைக்கும் என்கின்றன பூஜா பத்ததி நூல்கள். எள்ளுப் பூ: பிரம்மஹத்தி தோஷம் நீக்கும். கொன்றை - பெற்றோர் சாபம் தீர்க்கும். வில்வம் - செல்வ வளம் அருளும். தும்பை- கோஹத்தி முதலான சகல தோஷங்களையும் போக்கும். நெல்லி - கொடும் பிணிகளால் ஏற்படும் துன்பத்தை நீக்கும். மல்லிகை - இல்லற வாழ்வைச் சிறக்கவைக்கும். அருகம்புல் - ஆயுள் பெருகும் கருவூமத்தைப் பூ - பிள்ளைப்பேறு அருளும் அகத்திப் பூ- புகழைத் தரும் வெள்ளை ஊமத்தை - பகைவர் தொல்லை விலகும். அலரிப் பூ - நோய்கள் விலகும். தாமரை - சகல சம்பத்துகளையும் வறுமை இல்லாத செல்வ வளத்தையும் அருளும். சரி, வெளியூர்ப் பயணம் அல்லது பூக்கள் கிடைக்காத நிலை. இப்படி யான சூழலில் என்ன செய்யலாம். கவலையே வேண்டாம். திருமூலர் அற்புதமான ஒரு பாடலைத் தருகிறார். அந்தப் பாடல்... அம்புயம் நீலம் கழுநீர் அணி நெய்தல் வம்பு அவிழ் பூகமும் மாதவி மந்தாரம் தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே. இதில், 14 வகையான பூக்களைக் குறிப்பிட்டு, அவற்றால் செய்ய வேண்டிய வழிபாடுகளையும் விவரிக்கிறார். மனத்தில் ஈசனைத் தியானித்து இந்தப் பாடலைப் படித்தாலே போதும். பதினான்கு வகை யான பூக்களால் சிவனை பூஜித்த புண்ணியம் கிடைக்கும். இந்திரபோகம் உண்டாகும்; சகல நன்மைகளும் உண்டாகும். நினைத்த காரியம் நல்லபடியே நிறைவேற சிறப்பு புஷ்ப பூஜை! நினைத்த காரியங்கள் நல்லபடியே நடந்தேற திங்கள் கிழமை செய்ய வேண்டிய எளிய வழிபாடு உண்டு. அன்று மாலை வேளையில் நீராடி, திருநீறணிந்து, பூஜையறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும். சிவபுராணம் போன்றவற்றைப் பாடி வழக்கம்போல் வழிபடலாம். அத்துடன், சக்தி மிக்க எட்டு சிவநாமங்களைக் கூறி, எண் வகைப் பூக்களால் அர்ச்சித்து வழிபடுவது விசேஷம். எண்வகை பூக்கள்: மல்லிகை, காட்டு மல்லி, மர மல்லிகை, மகிழம்பூ, கொன்றை, செண்பகம், சிறு செண்பகம், மருக்கொழுந்து. சொல்லவேண்டிய சிவநாமங்கள்: ஓம் சர்வாய தேவாய நம: ஓம் பவாய தேவாய நம: ஓம் ருத்ராய தேவாய நம: ஓம் உக்ராய தேவாய நம: ஓம் பீமாய தேவாய நம: ஓம் பசுபதே தேவாய நம: ஓம் ஈசானஸ்ய தேவாய நம: ஓம் மஹதேர் தேவாய நம: எனக் கூறி மேற்கண்ட பூக்களைச் சமர்ப்பித்து வழிபட வேண்டும். இந்த வழிபாட்டின்போது, இயன்ற பதார்த்தங்களை நைவேத்தியம் செய்யலாம். இதன் மூலம் இவ்வுலக வாழ்வில் நாம் நினைத்தவை நடக்கும்; நிறைவில் சிவனடியைச் சேரும் புண்ணியம் கிடைக்கும் என்பார்கள் பெரியோர்கள். நன்றி : சக்தி விகடன் -ஜோதிட ஶ்ரீ முருகப்ரியன்