jepin
547 views
1 days ago
#✝️இயேசுவே ஜீவன் நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்* ஏப்ரல்-18 அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே, எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா, பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே. -ஆமென். அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில், அவர் நல்லவர். என்றென்றும் உள்ளது, அவரது இரக்கம். அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா. அளவில்லாத மகிமையுடைத்தான கடவுளாகிய இயேசுவே! உம்முடைய பிரதாப மகத்துவத்துக்கு, சரியான ஆராதனை நமஸ்காரத்தைத் தேவரீருக்குச் செலுத்த மனுமக்களாற் கூடாதாயினும், என்னாலியன்ற மட்டும், மிகுந்த பயபக்தியோடே தேவரீரை ஆராதிக்கிறேன். தேவரீருடைய திருநாமத்தைக் கொண்டு இடப்பட்ட பொய்யாணை, பொய்ச் சத்தியங்களுக்குப் பரிகாரமாக, அடியேன் வேதபாரகரும் மற்றச் சத்திய சாஸ்திரிகளும், உமக்குச் தோத்திரமாகச் செய்த அமிர்த பிரசங்கங்களையும், எழுதிய பக்தி நிறைந்த துதிகளையும், தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி. பரிசுத்த ஆவியானவரில் நம்மைப் புதுப்பிக்கும் தியானம்: உன்னத பரிசுத்த ஆவியானவரே, உமது வருகையால் திருச்சபையில் திரு நிலைப்படுத்தப்பட்ட உம் பணியாளர்களாகிய எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் அனைவரையும் உமது அருள் வரங்களால் நிரப்பும். உண்மையின் ஆவியே, உலக மக்கள் அனைவரும் மூவொரு கடவுள் விசுவாசத்தில் நிலைத்து நின்று உன்னதக் கடவுளின் சாட்சிகளாகத் திகழுமாறு உமது அருள் ஒளியை அனைவர் மீதும் வீசியருளும். திருச்சபையின் ஆன்மாவும், வழிகாட்டியும், ஆளுநருமான பரிசுத்த ஆவியே, விண்ணுலக அறிவிலும், தளராத விசுவாசத்திலும், தூய்மையான வழிகளிலும் எங்கள் ஆன்மாக்களை அன்றாடம் வழிநடத்துவீராக. நம் ஆன்ம வாழ்வின் அனைத்து நலன்களுக்காகவும் பரிசுத்த ஆவியாரிடம் செபிப்போமாக, பரிசுத்த ஆவியே! அருள் ஒளியே! அனைத்தையும் இயக்கும் இயக்க ஆற்றலே! வாழ்வோரின் நம்பிக்கையே! உமது அருள் ஒளியால் எங்கள் இதயங்களை நிரப்பும். எங்கள் ஆன்மாக்களின் பாவ அழுக்குகளை உமது அன்புத் தீயால் சுத்திகரித்தருளும். பழைய உயிரற்ற வாழ்க்கை நிலையிலிருந்து எங்களுக்கு புதுப் பிறப்பு அளித்தருளும். வெறும் மனிதகுல புகழ்ச்சிக்கும், இவ்வுலக பெருமைகளுக்கும் ஆசை கொள்ளாமல் தாழ்ச்சியுடனும், தன்னடக்கத்துடனும் நடந்து, மூவொரு இறைவனின் உன்னத சாட்சிகளாய் நாங்கள் வாழ உமது தெய்வீக ஆற்றலை எமக்கருளி அனுதினமும் எம்மை வழிநடத்தும். இவ்வுலக செல்வங்களின்மீது நாங்கள் மயக்கம் கொள்ளாமல், விண்ணக வாழ்வின் மேன்மையை அடைய இம்மண்ணக வாழ்வில் அருள் செல்வம் சேர்க்கும் ஆற்றலை எமக்கு அருள்வீராக. நிலையான புகழுக்குரிய, தூய்மைமிகு நற்கருணைக்கு, எல்லா காலமும் ஆராதனையும், புகழும் மாட்சிமையும் உண்டாகக்கடவது. இயேசுவுக்கே புகழ் ! மரியே வாழ்க !