2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்களின்படி, காசநோய் (TB) கண்டறிவதில் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான மாற்றங்கள் குறித்த விவரங்கள் இதோ உங்கள் பார்வைக்கு...
இதுவரை காசநோயைக் கண்டறிய நோயாளி தனது நுரையீரலிலிருந்து சளியை இருமி வெளியேற்ற வேண்டும். முதியவர்கள், குழந்தைகள் மற்றும் எச்.ஐ.வி (HIV) பாதிப்பு உள்ளவர்களால் போதுமான அளவு சளியை வெளியேற்ற முடியாது. இதனால் பலருக்கு நோய் இருந்தும் கண்டறியப்படாமல் போகிறது. மேலும், சளியைச் சேகரிக்கும் போது காற்றில் கிருமிகள் பரவும் அபாயமும் அதிகம்.
நாக்கு பஞ்சுருட்டு (Tongue Swabs) - புதிய புரட்சி:
இது ஒரு மென்மையான பருத்தி குச்சியைக் (Swab) கொண்டு நாக்கின் மேல் பகுதியை (Dorsum) தேய்த்து எடுக்கும் முறையாகும்.
எவ்வாறு செயல்படுகிறது?
காசநோய் கிருமிகள் நுரையீரலில் இருந்தாலும், அவை வாய் வழியாக வெளியே வரும்போது நாக்கின் மேல்பரப்பில் படிகின்றன. இந்தத் துடைப்பத்தில் உள்ள கிருமிகளின் டி.என்.ஏ-வை (DNA) நவீன மூலக்கூறு கருவிகள் மூலம் கண்டறியலாம்.
இதனால் ஏற்படும் நன்மைகள், வலி இல்லாதது. இருமிச் சளியை எடுக்க வேண்டிய அவசியமில்லை. அனைவருக்கும் ஏற்றது. சளி எடுக்க முடியாத முதியவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம். வேகமானது. 2026-ன் புதிய கருவிகள் மூலம் மிகக் குறுகிய காலத்தில் (Near point-of-care) முடிவுகளைப் பெறலாம். பாதுகாப்பானது கிருமிகள் காற்றில் பரவும் அபாயம் இதில் மிகக் குறைவு.
"TB-யை வெல்வோம்!" - மார்ச் 24 உலக காசநோய் தினம் - நாம் மாற வேண்டிய நேரம் இது!
மூலக்கூறு சோதனைகள் (Molecular Tests):
இப்போது வந்துள்ள புதிய கருவிகள் உதாரணமாக MiniDock MTB Test மிகவும் சிறியவை மற்றும் கையடக்கமானவை. இவை ஆய்வகங்களுக்குப் போகாமலேயே, நோயாளியின் அருகிலேயே வைத்துச் சோதனையை முடிக்க உதவுகின்றன. 2026-ஆம் ஆண்டு மார்ச் 24-ல் WHO இதனை அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரை செய்துள்ளது.
#காச நோய் குணமாக