ஆர்.கே.நகர் 42-வது வட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.எஸ். ராஜேஷ், தீவிர வாக்கு சேகரிப்பு:
"திருநங்கைகள் ஆதரவுடன் வீதி, வீதியாக, தொடங்கிய இரட்டைஇலை பிரச்சாரம்":
சென்னை, ஏப்.14:
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.எஸ். ராஜேஷ், நேற்று தொகுதியின் பல்வேறு பகுதிகளில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு 'இரட்டை இலை' சின்னத்திற்குத் தீவிரமாக ஆதரவு திரட்டினார்.
42-வது தெற்கு வட்டத்திற்குட்பட்ட கொருக்குப்பேட்டை மன்னப்பன் தெருவில் உள்ள அங்காளம்மன் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த வேட்பாளர் ஆர்.எஸ். ராஜேஷ், தனது நேற்றைய பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கினார். பிரச்சாரத்தின் போது திருநங்கைகள் பலர் வேட்பாளர் ஆர்.எஸ். ராஜேஷை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது அவர்கள் தங்களின் நீண்டகால கோரிக்கைகள் மற்றும் குறைகளை அவரிடம் முன்வைத்தனர். அவர்களது கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்த வேட்பாளர், "2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும், திருநங்கைகளின் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். அதுமட்டுமின்றி, ஆர்.கே.நகர் தொகுதியைச் சுகாதாரமான மற்றும் தூய்மையான முன்மாதிரித் தொகுதியாக மாற்றுவேன்" என உறுதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து முனியப்பன் தெரு, ஏகப்பன் தெரு, ஜவான்கார்சவுக்கான் தெரு, ரங்கநாதபுரம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு, கற்பக விநாயகர் கோவில் தெரு, தங்கவேல் பிள்ளை தோட்டம், மதுரை முத்து தெரு, பெட்டிமுனுசாமி தெரு, ஒன்டிவீரப்பன் தெரு, ஏகாம்பரம் செட்டி தெரு, தியாகப்பன் செட்டி தெரு மற்றும் நாகப்பன் தெரு ஆகிய பகுதிகளில் அவர் வீதி வீதியாகச் சென்று மக்களைச் சந்தித்தார். பொதுமக்களிடம் தேர்தல் துண்டறிக்கைகளை வழங்கி, அ.தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும், மீண்டும் எடப்பாடியார் ஆட்சி அமைய வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாக விளக்கிப் பேசினார்.
இந்த பிரச்சாரத்தின் போது அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு ஆர்.எஸ். ராஜேஷிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
#💪தி.மு.க #📺அரசியல் 360🔴 #🔷காங்கிரஸ் #✌️அ.தி.மு.க