அன்புமணி ராமதாஸ்
628 views
5 days ago
கடலூர் மாவட்டம் எலவத்தடி கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நெய்வேலி மேற்கு ஒன்றிய செயலாளர்  சி.முருகவேல் உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்த  முருகவேலை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், கடலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும்  தெரிவித்துக் கொள்கிறேன். ##PMK2.0