விதி வீதி வழி நடப் போர்க்கு வீதி தெரியாமல் போனால் வீடு .
விதி வீதி வழி நடப் போர்க்கு வீதி தெரியாமல் போனால் வீடு சேருவது எங்கே
பிறந்தவன் வாழ்கிறான்..வாழும் பிறந்தவன் விதி தெரியாமல் அதன் சத்
சதி உணராமல் வீடு பெறுவது எங்கே
வாழ்வில் மரணம் ரகசியம் மரணத்திற்கு பின் நடப்பது ரகசியம் பிறப்புக்கு முன் எங்கே இருந்தோம் என்பது ரகசியம்
நாளை நடப்பது ரகசியம் நாமும் நாளைஇருப்போமா அதுவும் ரகசியம்
ரகசியத்திலே வாழ்வை கடத்தும்அந்தரகசியம்எது,
தலையில் உள்ள எழுத்தும் தரணியில் வாழபோகும் வாழ்வும் ரகசியம் ரகசியம்
எத்தனை ரகசியம் இருந்தாலும் அதை சட்டை பண்ணாமல் ஆனந்தமாக வாழும்மனிதரின் ரகசியம் அந்தரகசியமே அறியாமல் திணரும் ரகசியம்
ரகசியத்தைதேடிஞானி களும் யோகிகளூம் சித்தர்களும் ரகசிய உலகை அணு அணுவாக சல்லடை போட்டு சளிக்காமல் தேடினார்கள்
தேடி சென்ற யோகியூம் கண்டு உணர்ந்தான் அந்த ரகசியம்
அட இதுக்கு தானா இவ்வளவு தேடினோம் என வியப்பு வந்து
மௌனமான யோகிகள் கோடி கோடி பேர்
அதை மக்களுக்கு சொல்லலாம் என முடிவு பண்ணி சொல்லி விட்டு சென்ற சித்தர்களும் லட்சம் லட்சம் பேர்
அப்படிஎன்னதான் இருக்கு அந்த ரகசியத்திலே விதி அதைஎழுதுவதுநாமே
எழுதியவனேஎழுதியதை தெரியாமல்வாழ வைக்கும் காலமும் சிரிக்க
விதியைமாற்றிஅமைக்கும் சக்திமனிதரிடமே உள்ளது
என்றஉண்மையை காலம் அறிந்தும் அதை நாமும் அறியும் வரை அமைதி காக்கும்காலமும்வாழ்வின் சுவாரஸ்யமானவையே
கண்டவர்கள் விண்டதுண்டு விண்டவர்கள் கண்டது உண்டு
அதிசயம் என்னவென்றால் கண்டவர்கள் எதுவும் கூறுவதில்லை
உடல் விட்டு சென்ற உயிர் அனைத்தையும் அறியும்
உடலோடு இருக்கும் உயிர் எந்த ரகசியமும் அறிவது இல்லை
அப்படி என்றால் இங்கு தடை என்பது உடலே
உடலைமறந்தவன் உயிராய் ஆனவன் ரகசியம் அறிய முடியும்
அந்த உடலை மறப்பதே நிர்வாணம் என்கிற பொருள் அதற்க்காக ஆடை இல்லாமல் திரியும் பைத்தியங்கள் உடலை மறந்தவன் ஆக மாட்டான்
உடல் தான் உயிருக்கு ஆடைஅந்த ஆடை மறந்து இருப்பது வேறு
வெறும் துணி ஆடைதுறந்துவிட்டுதுறவி வேசம் ரகசியம் அறியாது
ரகசியத்தை அறியமுதல் தகுதி உயிராக இருப்பதே
அதற்கு தான் யோகா தியானம் அனைத்தும் பயன்படுத்த குருமார்கள் சொல்கிறரார்கள்
செம்மையான உடலே மனதை செம்மை ஆக்கும்
செம்மையானமனமே உயிரைசெம்மை ஆக்கும்
செம்மையான உயிரே உயிரின் ரகசியம் அறியும்
அந்த ரகசியம்நாமே விதி அதை படைப்பது நாமே அதை மாற்றுவதும் நாமே
அனைத்தும் நம் கையில்
உயிரான சிவத்தை உணர்ந்தால்அந்த ரகசியம் யாரும் அறியலாம்
உணர்ந்து அறியவேண்டிய ஒன்றை உணராமல் யாருக்கும் சொல்ல
வேண்டாம் என்றேயாரும் அந்தரகசியம் கூறு வதில்லை
ஏழ குதிரை பிடித்து மூன்றாம் கண் வழி ஏழும் வழி கண்டால்
அந்த தேரில் ஆண்டவன் அமர அழகு தேரில் உலகைவந்த வேலை முடித்து ஆனந்தமாக யாத்திரை அமைய ஆமரனாகும் ஆருயீர்..ஓம் நமசிவாய.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
#தெரிந்து கொள்ளுங்கள் #god