Rockyamar
473 views
20 days ago
இவனும் அவனும் ஆண்ட தமிழ் நாட்டில் அவர்கள் கட்சி வார்டு கிளை செயலாளர் கூட பணக்காரன் ஆனான் தொண்டன் அடிமையாக கிடந்தான் பொது மக்கள் ஏழைகளாகவே கிடந்தார்கள்,எங்களை கை ஏந்தவே பழக்கி விட்டனர்.எங்கள் உரிமைகளை உரக்க கேட்க முடியவில்லை அடிப்படை தேவைகளை கெஞ்சி கேட்க வைத்தார்கள் உடலை வருத்தினால்தான் சோறு என்று புரிய வைத்தார்கள். ஒருநாள் உழைக்காமல் பணம் வரும் என்று காக்க வைத்தார்கள் அது தான் அந்த தேர்தல் நாள் எங்களை கையேந்த வைத்த ஆட்சியாளர்கள் சொற்ப காசுக்கு எங்கள் வாக்குகளை விற்க வைத்தார்கள்.இதுதான் இந்த ஆட்சியாளர்களின் வெற்றி நாங்கள் வழக்கம்போல் உழைத்தால் தான் சோறு என்று ஓடிவிடுவோம் அவர்கள் வழக்கம்போல் எங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த போவதாக கூறி மத்திய மாநில அரசுகளிடம் நிதி பெற்று வார்டு கிளை செயலாளர் முதல் முதலமைச்சர் வரை பிரித்துக் கொள்வார்கள் சொத்துக்களை சேர்த்துக் கொள்வார்கள். ஏழைகள் எங்கள் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது. நாங்களும் அடுத்த ஆயிரம் ரூபாய் ஓய்வு நாளை எதிர்பார்த்து காத்திருப்போம். வாழ்க ஜனநாயகம்!!!!!! ஆட்சி மாற்றத்தால் இங்கு எதுவும் மாறப்போவதில்லை!!!! #👉வாழ்க்கை பாடங்கள்