Fahmi
482 views
6 hours ago
#👌அருமையான ஸ்டேட்டஸ் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் *தினம் ஒரு நபிமொழி* *தெரிந்து கொள்வோம்* *இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'* *நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக அங்கசுத்தி (உளூ) செய்வது போன்று அங்கசுத்தி செய்துகொள். பிறகு உன் வலப்பக்கத்தின் மீது சாய்ந்து படு. பிறகு, 'அல்லாஹும்ம அஸ்லம்த்து நஃப்ஸீ இலைக்க. வ ஃபவ்வளத்து அம்ரீ இலைக்க. வ அல்ஜஃத்து ழஹ்ரீ இலைக்க. ரஃக்பத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க. ஆமன்த்து பி கித்தாபிக்கல்லதீ அன்ஸல்த்த வபி நபிய்யிக்கல்லதீ அர்சல்த்த' என்று ஓதிக்கொள்.* *(பொருள்: இறைவா! உனக்கு நான் கீழ்ப்படிந்தேன். காரியம் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்தேன். என் விவகாரங்கள் அனைத்திலும் உன்னையே சார்ந்திருக்கிறேன். உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும் தான் (இவற்றை செய்தேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடமில்லை. நீ அருளிய உன்னுடைய வேதத்தையும், நீ அனுப்பி வைத்த உன்னுடைய நபியையும் நான் நம்பினேன். (இவ்வாறு நீ பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கி அன்றைய இரவில் நீ இறந்துவிட்டால் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவனாவாய். இந்தப் பிரார்த்தனையை (இரவின்) இறுதிப்பேச்சாக ஆக்கிக்கொள்.* *இந்த நபிமொழியின் அறிவிப்பாளரான பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:* *'நான் இவற்றைத் திரும்ப ஓதிக்காட்டுகிறேன்' என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறிவிட்டு ஓதிக் காட்டலானேன். ('நீ அனுப்பிய உன் நபியையும் நான் நம்பினேன்' என்பதற்கு பதிலாக) 'நீ அனுப்பிய உன் ரசூலையும் நான் நம்பினேன்' என்று நான் சொல்லிவிட்டேன். உடனே நபி(ஸல்) அவர்கள், 'இல்லை; 'நீ அனுப்பிய உன் நபியை நம்பினேன்' என்று சொல்' என (எனக்குத் திருத்தி)ச் சொன்னார்கள்.* *நூல் : புகாரி 6311*