#🕌இஸ்லாம் #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕋யா அல்லாஹ் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இரவின் இருள் பரவத் தொடங்கிவிட்டால்" அல்லது "அந்திப் பொழுதாகிவிட்டால்" உங்கள் குழந்தைகளை (வெளியே திரியவிடாமல்) தடுத்துவிடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (புத்தெழுச்சியுடன் பூமியெங்கும்) பரவுகின்றனர். இரவின் சிறிது நேரம் கழிந்துவிட்டால் குழந்தைகளை (வெளியே செல்ல) விட்டுவிடுங்கள். மேலும், (வீட்டின்) கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். அப்போது அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை.
உங்களுடைய பாத்திரங்களை மூடி வையுங்கள்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 4100.
அத்தியாயம் : 36. குடிபானங்கள்