வாழ்க்கை வழியில்
சுமை கூடும் போது,
துவண்டு போன என் மனதிற்கு
தோள் கொடுக்கக் காத்திருக்கும் தோழி நீ
கண்ணீர் துளிகள்
என் இமைகளை நனைக்கும் முன்னே,
அன்பால் துடைக்கத் துடிக்கும்
ஆறுதல் கரம் நீ.
உலகமே என்னை
விட்டு விலகி நின்றாலும்,
என் மௌனத்தின் வலியைப் புரிந்து
என்னோடு பயணிக்கும் நிழல் நீ.
வருந்த மாட்டேன் என் அன்பே...
என் சோகங்களைப் பகிர்ந்துகொள்ள
என் தோழி நீ இருக்கிறாய்,
என்றும் எனக்காக!
#💝இதயத்தின் துடிப்பு நீ