#🖌பக்தி ஓவியம்🎨🙏 விநாயகரின் முப்பத்திரண்டு வடிவங்களில் எட்டாவது வடிவமாக போற்றப்படுகின்ற உச்சிஷ்ட கணபதியை மூலவராகக் கொண்டுள்ள 'உச்சிஷ்ட கணபதி கோயில்' திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஈசான பாகத்தில் அமைந்துள்ள தாமிரபரணி நதி வடக்கு முகமாக (உத்திர வாஹினி) ஓடுகின்ற பகுதியில் உள்ள மணிமூர்த்தீஸ்வரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் சுமார் 900 வருடங்கள் பழைமையான கோயில் என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
சக்தி வாய்ந்த நெல்லை ஶ்ரீ உச்சிஷ்ட கணபதி!!
உச்சிஷ்ட என்றால் இருப்பதிலேயே “மேன்மையானது” என்று அர்த்தம். `உச்சிஷ்ட கணபதி' என்ற திருநாமம் இருந்தாலும், `மூர்த்தி விநாயகர்' என்றே இவர் அழைக்கப்படுகிறார்.