Dr.Ganapathi - siddha doctor
470 views
8 days ago
*#மண்ணீரல்* ( *#Spleen* ) - 2 ஸ்ப்லீனோமெகலி ( *#Splenomegaly* ) தேவைக்கு அதிகமாக தட்டணுக்கள் சேரும் போது, மண்ணீரல் பாதிக்கப்படும். போதுமான அளவு ரத்தம் கிடைக்காவிட்டால் பாதிப்பு வரும். மலேரியாவை உருவாக்கும் ஒட்டுண்ணிகளால் மண்ணீரல் பாதிக்கப்பட்டால், மண்ணீரலின் உள்ளே சிதைவு ஏற்பட்டு, உள்ளேயே வீக்கமும், ரத்தக் கசிவும் ஏற்படலாம். இயல்பான செயல்பாட்டை விட வேகமாக மண்ணீரல் செயல்படும். நீணநீர் மண்டலங்கள் பாதிக்கப்பட்டு. உடம்பின் எடை அதிகரிக்கும். இதனால் உடல் பாரமாகத் தெரியும். வயிற்றில் வீக்கம் ஏற்படும். சிறிதளவு சாப்பிட்டாலும், நிறைய சாப்பிட்ட உணர்வு ஏற்படும். இது அபாயகரமான அறிகுறி. அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்படும். நாக்கு வறண்டு… விறைப்புத்தன்மையை அடையும். தொண்டை உலர்ந்து போகும். வாயுக்களால் உடம்பெங்கும் வலி உண்டாகும். குமட்டல், வாந்தி, மயக்கம் ஏற்படும். தலைச்சுற்றல் இருக்கும். உடல் பலவீனமடையும். கால் பகுதிகளில் வீக்கம், வலி, சாப்பிட்டவுடன் தூக்கம் ஏற்படும். எப்போதும் சோர்வு இருக்கும். மஞ்சள் காமாலை ஏற்படும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சிறுநீர் சரியாகப் பிரியாது. இதனால் உடல் பாரமாகத் தெரியும். வேகமாக இதயத்துடிப்பு இருக்கும். சில நேரங்களில் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீர் அடங்காமை அதிகரிக்கும். கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் மண்ணீரல் பெரிதாக இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இதயம் இரத்தத்தை உறிஞ்சுவது போல் மண்ணீரலும் இரத்தத்தை உறிஞ்சும் தன்மை உடையது என்பதால் ரத்தத்தில் அமிலத் தன்மை அதிகமாகி (இரத்தத்தில் பித்த நீர் அதிகரிப்பதால்) மண்ணீரலில் பாதிப்பு ஏற்படும். அடிக்கடி கோபம் மற்றும் எரிச்சல் அடைபவர்களுக்கு, மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் மண்ணீரல் பாதிக்கப்படும். மதுப்பழக்கம், புகைபிடித்தல் போன்றவற்றால் இந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். கல்லீரல் அழற்சி, வயிற்றில் புண், பித்தப்பை மற்றும் குடல் ஆகியவற்றால் மண்ணீரல் பாதிக்கப்படலாம். ஒர் அளவுக்குதான் கல்லீரல், நிணநீர் கட்டிகள் இதன் பணியை செய்யும். அதே சமயத்தில் மண்ணீரலை அகற்றியவர்களுக்கு அடிக்கடி தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் வேறு கோளாறுகள் மற்றும் நோய்கள் உடலில் இருப்பவர்களுக்கு மண்ணீரலும் அகற்றப்பட்டால், மேலும் பாதிப்புகள் 100% அதிகமாகும். மண்ணீரல் ஆரோக்கியமாக இருந்தால், ஜீரண மண்டலமும், நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருக்கும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *#டாக்டர்_இரா_கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495. #சித்த மருத்துவம்